Asianet News TamilAsianet News Tamil

கூடலூரில் பேசும்போது நடந்த விஷயம்; திடீரென பேச்சு நிறுத்திக் கொண்ட காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி!!

கூடலூரில் மேடையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசிக் கொண்டு இருக்கும்போது, மசூதியில் இருந்து இஸ்லாமிய தொழுகை பாடல் ஒலித்ததால் தனது உரையை சிறிது நேரம் நிறுத்திக் கொண்டார். மீண்டும் பேச்சை துவக்கினார். 

கூடலூரில் மேடையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசிக் கொண்டு இருக்கும்போது, மசூதியில் இருந்து இஸ்லாமிய தொழுகை பாடல் ஒலித்ததால் தனது உரையை சிறிது நேரம் நிறுத்திக் கொண்டார். மீண்டும் பேச்சை துவக்கினார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை  தமிழ்நாட்டில் துவங்கினார். இங்கிருந்து கேரளாவில் நடைபயணம் சென்றார். நேற்று 21-வது நாளாக மலப்புரம் மாவட்டத்தில் நடைபயணத்தை  மேற்கொண்டு இருந்தார். தொடர்ந்து நீலம்பூர் வழியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் ஆமைகுளத்தை இன்று வந்தடைந்தார். அங்கு அவருக்கு தமிழக காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பாத யாத்திரையாக கோழிப்பாலம், பள்ளிப்பாடி, நந்தட்டி, செம்பாலா, துப்புக்குட்டி பேட்டை வழியாக கூடலூர் பழைய பஸ் நிலையம் வந்தார். இங்கு அமைக்கப்பட்டு இருக்கும் பொதுக்கூட்ட மேடையில் பேசினார்.

Video Top Stories