Asianet News TamilAsianet News Tamil

Masi Festival : திருச்செந்தூா் மாசித் திருவிழாவில் இன்று சிவப்பு சாத்தல்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா 7ஆம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (மாா்ச் 3) சுவாமி தங்க ரதத்தில் சிவப்பு சாத்தி வீதியுலா வருகிறாா்.
 

திருச்செந்தூர் திருக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த பிப். 25ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, 7ஆம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (மாா்ச் 3) அதிகாலை 5 மணிக்குள் சண்முகப் பெருமானின் உருகுசட்ட சேவை நடைபெற்றது. தொடர்ந்து 8.45 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெட்டிவோ் சப்பரத்தில் எளுந்தருளி பக்தா்களுக்கு தரிசனம் அளித்தார்.

அங்கு அபிஷேகம், அலங்கார, தீபாராதனைக்குப் பின்னா், மாலை 4.30 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் வீதியுலா வருகிறாா்.
 

Video Top Stories