மல்டி டாஸ்க் போட்டி நடக்கிறது. ஆனால் சந்தியா முழு மனதோடு செய்ய இயலாமல் கீழே விழுந்து விடுகிறார். இதனால் போலீஸ் அதிகாரி கோபப்படுகிறார்

முன்னதாக போலீஸ் ட்ரைனிங்கிற்கு சென்றிருந்த சந்தியாவிற்கு திடீரென மயக்கம் வந்து விழுந்துவிட்டார். இன்றைய எபிசோடில் அவரை தண்ணீர் தெளித்து அனைவரும் எழுப்பி விடுகின்றனர். பின்னர் அங்கிருந்தவர்கள் நீங்கள் மிகவும் சென்டிமெண்டாக இருக்கிறீர்கள் அதனால் தான் இதுபோன்று நடக்கிறது நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் பேசுங்கள் எனக் கூறுகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதை அடுத்து சரவணனுக்கு போன் செய்து தனக்கு மிகவும் மயக்கமாக இருப்பதாகவும் வாந்தி வருவதாகவும் தெரிவிக்கிறார் சந்தியா இதை அடுத்து குழப்பத்தில் இருக்கிறார் சரவணன். அந்த நேரத்தில் அருகில் இருந்த பெண் சந்தியாவிற்கு இது போன்ற சிம்டம்ஸ் இருந்தால் அவர் ஒருவேளை கர்ப்பமாக இருக்கலாம் என கூறுகிறார். இதனால் குழப்பம் அடைகிறார் சரவணன்.


மேலும் செய்திகளுக்கு...லோஹிப் பேன்ட் அணிந்து வெளிநாட்டில் கவர்ச்சி பரப்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்

அடுத்த நாள் காலையில் சந்தியாவிடம் இதை தெரிவிக்க காத்திருக்கையில் இந்த பக்கம் சந்தியாவோ போனை சார்ஜில் போட்டுவிட்டு டிரைனிங் சென்று விடுகிறார். இந்த விஷயம் குறித்து சந்தியாவிடம் பேச பலமுறை சரவணன் போன் செய்கிறார்.ஆனால் சந்தியா போனை எடுக்கவில்லை இதனால் பதட்டமடைகிறார் சரவணன். 

மேலும் செய்திகளுக்கு... மகனின் அழகிய புகைப்படத்தோடு ஆறு மாத கால அனுபவத்தை பகிர்ந்த காஜல் அகர்வால்

மறுபக்கம் ட்ரைனிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மல்டி டாஸ்க் போட்டி நடக்கிறது. ஆனால் சந்தியா முழு மனதோடு செய்ய இயலாமல் கீழே விழுந்து விடுகிறார். இதனால் போலீஸ் அதிகாரி கோபப்படுகிறார். உன்னைப் போன்ற ஒரு கேண்டிடேட்டை நான் இதுவரை பார்த்ததே இல்லை என கடுமையாக சந்தியாவை திட்டுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது