Asianet News TamilAsianet News Tamil

வாட்ஸ் ஆப் அதிரடி....! இந்தியாவில் மட்டும் டிஜிட்டல் பரிவர்த்தனை..!

whats app going to start digital transaction in india
wats app-going-to-start-digital-transaction-in-india
Author
First Published Apr 5, 2017, 9:56 AM IST


டிஜிட்டல்  இந்தியா  கனவோடு  பயணிக்கும்   மக்கள் தற்போது நாளுக்கு நாள்  டிஜிட்டல்  பரிவர்த்தனையை  மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

அதாவது  கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக    ரூபாய் நோட்டு  செல்லாது  என  பிரதமர் மோடி அறிவித்தார் . அதனை தொடர்ந்து,பேடிஎம் , மொபிவிக் உள்ளிட்ட  செயலிகள்  பண  பரிவர்த்தனை  செய்வதற்கு அதிகம்  பயன்படுத்தப் பட்டு வருகிறது . இந்நிலையில்,  வாட்ஸ் ஆப் செயலியானது  இந்தய மக்களால்  பெரிதும் பயன்படுத்தப் பட்டு வருகிறது அதுமட்டுமில்லாமல், ஒவ்வொரு நாளும்  புது புது கூடுதல் சிறப்பம்சங்களை வாட்ஸ் ஆப்பில்  அறிமுகம்  செய்யப்பட்டு வருகிறது .

 வாட்ஸ்ஆப்  பொறுத்தவரை  எளிதில் பயன்படுத்தும்   விதத்திலும் , தொழில்நுட்பத்தில்  சிறந்து விளங்குவதால்,  இந்த  செயலியை  பயன்படுத்தி , பண பரிவர்த்தனை  செய்வதற்கு  முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது .

அதன் படி, மத்திய அரசின் UPI வழிமுறையினை, வாட்ஸ்அப்பில் டிஜிட்டல்  பரிவர்த்தனை வழங்குவது குறித்து, வாட்ஸ்அப்   நிறுவனம் மத்திய அரசு அதிகாரிகளுடன்  பேச்சுவார்த்தை  நடத்தி உள்ளது .

இந்தியாவை  பொறுத்தவரை  வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களின்  எண்ணிக்கை 2௦௦  மில்லியன்  என்பது குறிப்பிடத்தக்கது .

ஒரு வேளை வாட்ஸ் ஆப்,  டிஜிட்டல்  பரிவர்த்தனை செய்யும் வசதியை  அறிமுகம் செய்தால்  மற்ற  நிறுவனங்கள்  பெரிய  அளவில்  இழப்பை சந்திக்கும்   என்பது   குறிப்பிடத்தக்கது .

 

Follow Us:
Download App:
  • android
  • ios