jio has a great place among the people.

ஜியோ அறிவிக்கும் எந்த அறிவிப்பும் அது சலுகையாக தான் இருக்கும். அதனால் தான் மக்கள் மத்தியில் ஜியோ மாபெரும் இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு மாபெரும் சலுகையை வழங்க திட்டமிட்டுள்ளது ஜியோ.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதாவது, டேட்டா சேவையில் ஒரு மாபெரும் புரட்சியையே உருவாக்கிய ஜியோ தற்போது ஜியோ பைபர் நெட்சேவையை வழங்க உள்ளது. தங்களது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பரிசாக இந்த திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது ஜியோ என்பது கூடுதல் தகவல்.

திட்டம் விவரம் :

இந்த சிறப்பு திட்டத்தின் படி, வெறும் ரூபாய் 5௦௦-கு,1௦௦ ஜிபி டேட்டாவை வழங்க உள்ளது.1 gbps வேகத்தில் சேவையை வழங்க உள்ள ஜியோ கண்டிப்பாக மக்களிடேயே மீண்டும் நல்ல வரவேற்பை பெரும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது.

இந்த திட்டமானது ஆரம்பத்தில் 1௦௦ முக்கிய நகரங்களில் தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை இஷா அம்பானி அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.