ஜியோ பாரத் என்ற 4ஜி தொழில்நுட்ப ஃபோனை ஜியோ நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது. இதன் பல்வேறு சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களை கவரும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.

ஜியோ பாரத் என்ற 4ஜி தொழில்நுட்ப ஃபோனை ஜியோ நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது. கீ பேட் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஃபோன் வாடிக்கையாளர்களை அதிகம் இம்ப்ரஸ் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

4ஜி தொழில்நுட்பத்தில் மிகவும் குறைந்த விலையில் இந்த ஃபோனை ஜியோ அறிமுகம் செய்திருக்கிறது. ஜூலை 7 முதல் 6,500 தாலுகாக்களில் முதல் 1 மில்லியன் ஜியோ பாரத் போன்களின் பீட்டா சோதனையை நிறுவனம் தொடங்கும். இந்த புதிய இணைய வசதி கொண்ட போன் விலை ரூ. 999 மட்டுமே ஆகும்.

இதற்கிடையில், நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் JioPhone 5G போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் கசிந்த கைபேசியின் நேரடி படங்கள் JioPhone இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்கள் குறிப்பாக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களை வாங்க முடியாத வாடிக்கையாளர்களின் பிரிவை இலக்காகக் கொண்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் ஆகாஷ் அம்பானி இதுகுறித்து கூறும்போது, "இந்தியாவில் இன்னும் 250 மில்லியன் மொபைல் போன் பயனர்கள் 2ஜி சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

WhatsApp-ன் 5 சீக்ரெட் அம்சங்கள் உங்களுக்கு தெரியுமா.? தெரிஞ்சா அசந்துடுவீங்க

நாடு இப்போது 5ஜியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இணைய அணுகலுடன் கூடிய பட்ஜெட் போன்களை விற்பனை செய்வதன் மூலம் இந்தியாவை 2ஜி-முக்த் பாரத் ஆக்குவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று கூறினார். ரீசார்ஜ் திட்டங்களின் அடிப்படை விலையையும் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோ வரம்பற்ற அதாவது அன்லிமிடெட் குரல் அழைப்புகள் மற்றும் 14 ஜிபி டேட்டாவை வெறும் ரூ.123க்கு ஜியோ பயனர்களுக்கு தருகிறது. மறுபுறம், வரவிருக்கும் ஜியோபோன் கருப்பு நிறத்தில் வரும் என்றும், இரட்டை பின்புற கேமரா வசதியுடன் வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Samsung Galaxy M34 5G : நோ ஷேக் கேமரா.. செம பேட்டரி.! மாஸ் கம்பேக் கொடுக்கும் சாம்சங் கேலக்ஸி M34 5G