jio announces super offer for customers

தொலை தொடர்பு நிறுவனங்களில் சும்மா பட்டய கிளப்பும் ஜியோ தற்போது ஓர் அதிரடி ஆபரை அறிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதன்படி,200 சதவீதம் கேஷ்பேக ஆபர் கொடுக்கிறது.

அதன்படி,

399 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தால், 50 ரூபாய் மதிப்பிலான 8 ரீசார்ஜ் வவுச்சர்கள் வழங்குகிறது. இதன் மூலம் முதலில் 400 ரூபாய் கேஸ்பேக் கிடைக்கிறது.

எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் தெரியுமா..?

399 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்வது போன்றே 799 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் போது, ஏற்கனவே கொடுத்த அந்த 8 வவுச்சர்களைப் பயன்படுத்தி, 400 ரூபாய் குறைத்துக் கொள்ளாலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்,மீதம் 399 ரூபாய் மட்டுமே நாம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.

இதெல்லாம் தவிர்த்து,மொபிவிக், அமேசான் உள்ளிட்டவற்றில் பொருட்களை வாங்கும் போது ஒரு குறிபிட்ட சதவீத தொகையை கேஷ்பேக் மூலம் நமக்கே கிடைக்கிறது

இவ்வாறாக நீங்கள் 399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்,799 ரூபாய்க்கு சலுகைகளை ஜியோ நிறுவனம் வழங்குகிறது என்பது கூடுதல் தகவல்.