Asianet News TamilAsianet News Tamil

ஓசூர் அருகே 60 ஆயிரம் பேர் பணிபுரியும் iPhone உற்பத்தி ஆலை அமைக்கப்படும்: மத்திய அமைச்சர அறிவிப்பு

ஓசூர் அருகே ஐபோன் தயாரிப்பு பிரிவு அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் சுமார் 60 ஆயிரம் பேர் பணிபுரிவார்கள் என்றும் மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

iPhone manufacturing unit to come up near Hosur and 60,000 workers to be employed, says IT Minister
Author
First Published Nov 18, 2022, 12:37 PM IST

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் தயாரிப்பதற்கான மிகப்பெரிய யூனிட் பெங்களூருவில் உள்ள ஓசூர் அருகே வரவிருக்கிறது, இதில் சுமார் 60,000 பேர் பணியாற்றுவார்கள் என்று தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 

இந்தியாவில் ஐபோன் இணைப்புகளை உற்பத்தி செய்யும் பணியை ஆப்பிள் நிறுவனம் ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.  இந்த நிலையில், ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ் விழாவில் மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ராஞ்சி மற்றும் ஹசாரிபாக் அருகே வசிக்கும் ஆறாயிரம் பழங்குடியின பெண்களுக்கு ஐபோன்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், " ஆப்பிளின் ஐபோன் இப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது, இது இந்தியாவின் மிகப்பெரிய ஆலை பெங்களூரு அருகே ஓசூரில் அமைக்கப்படுகிறது. ஒரே தொழிற்சாலையில் 60,000 பேர் வேலை செய்வார்கள். இந்த 60,000 ஊழியர்களில் முதல் 6,000 ஊழியர்கள் அருகிலுள்ள இடங்களைச் சேர்ந்த நமது பழங்குடி சகோதரிகள் இருப்பார்கள். ராஞ்சி மற்றும் ஹசாரிபாக் பழங்குடியின சகோதரிகளுக்கு ஆப்பிள் ஐபோன் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

குபெர்டினோ நிறுவனம் ஐபோன் உற்பத்திக்குத் தேவையான பணிகளை ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இந்நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் ஜாம்பவான்களான ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன.

ரூ.50 ஆயிரத்திற்குள் iPhone 13 வாங்கலாம்.. எப்படி? இப்படி..

இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு ராய்ட்டரஸ் நிறுவனம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தது. அதில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் பணியாளர்களை நான்கு மடங்காக உயர்த்த ஆப்பிள் சப்ளையர் நிறுவனமான ஃபாக்ஸ்கான் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல், தற்போது ஓசூர் அருகே ஐபோன் ஆலை குறித்த விவரங்கள் வந்துள்ளன. 

உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலையான சீனாவின் Zhengzhou ஆலை குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. இதேபோல், ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 53,000 பணியாளர்களை சேர்த்து, தென்னிந்தியாவில் உள்ள தனது ஆலையில் 70,000 தொழிலாளர்களை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios