சில பதவிகள் பாதுகாப்பானவை என்று நினைத்தால் அது தவறு. விரைவில் வேலைவாய்ப்புச் சூழல் மாறும். தலைமை நிர்வாக அதிகாரி பதவிகூட பாதுகாப்பில்லை என்று கூகிளின் முன்னாள் வணிக அதிகாரி எச்சரித்துள்ளார்.

AGI and Job Security : வேலைவாய்ப்புத் துறையில் நிச்சயமற்ற தன்மை என்பது புதிதல்ல. பொருளாதார மந்தநிலை, கோவிட் தொற்று போன்ற பல காரணங்களால் வேலைவாய்ப்புப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பல நிறுவனங்கள் தொடர்ந்து பணியாளர்களைக் குறைத்து வருகின்றன. இந்நிலையில், கூகிளின் முன்னாள் தலைமை வணிக அதிகாரி மோ கவ்தாத் அதிர்ச்சிகரமான கருத்தைத் தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளில் எந்த வேலையும் பாதுகாப்பானதாக இருக்காது, இது தலைமை நிர்வாக அதிகாரிக்கும் பொருந்தும் என்று அவர் கூறியுள்ளார். வேலை இழப்பு என்பது கீழ்நிலை, மேலாளர் நிலை மட்டுமல்ல, தலைமை நிர்வாக அதிகாரியையும் பாதிக்கும் என்று கவ்தாத் கூறியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு மனிதவள வேலைகளுக்கு அச்சுறுத்தல்

செயற்கை பொது நுண்ணறிவு (AGI) பலரது வேலைகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று மோ கவ்தாத் எச்சரித்துள்ளார். AGI பல துறைகளில் வேலைகளைக் கைப்பற்றும். தலைமை நிர்வாகிகள், படைப்பாளிகள் உள்ளிட்ட பல வேலைகள் பாதுகாப்பான பட்டியலில் இருந்து விலகும் என கூறியுள்ளார். இந்தப் பதவிகளை AGI ஆக்கிரமிக்கும். இதற்கு அதிக நாட்கள் எடுக்காது என்று கவ்தாத் கூறியுள்ளார். AGI அனைத்தையும் சிறப்பாகச் செய்யும். அதாவது, தலைமை நிர்வாக அதிகாரியை விட AGI சிறப்பாக நிர்வகிக்கும் என்று கவ்தாத் கூறியுள்ளார்.

அடுத்த 15 ஆண்டுகளில் வேலைவாய்ப்புச் சூழல் மாற்றம்

செயற்கை பொது நுண்ணறிவு தொழில்நுட்பம் வேலைவாய்ப்பு உலகில் புரட்சியை ஏற்படுத்தும். அடுத்த 15 ஆண்டுகளில் வேலைவாய்ப்புச் சூழல் மாறும். AGI தொழில்நுட்பத்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். ஆனால், எண்ணிக்கை குறைவாக இருக்கும். AGI அனைத்து ஊழியர்களையும் பாதிக்கும் என்பது உண்மை. 15 ஆண்டுகளுக்குள் அனைத்து மாற்றங்களும் புதிய வேலைவாய்ப்பு உலகத்தை நோக்கி உலகைக் கொண்டு செல்லும் என்று அவர் கூறியுள்ளார்.

300 பேர் செய்ய வேண்டிய வேலையை 3 பேர் செய்கிறார்கள்

கூகிளின் வணிக அதிகாரியாகப் பணியாற்றிய கவ்தாத், வேலையை விட்டுவிட்டு புதிய AI ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் உணர்வுசார் நுண்ணறிவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. தற்போது மூன்று பேர் மட்டுமே இந்த நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு 300 பேர் தேவைப்பட்டிருப்பார்கள் என்று கவ்தாத் கூறியுள்ளார். 

மேலும் 'AI-யின் தந்தை' என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டனின் கருத்து தற்போது முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஹிண்டனின் கூறுகையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள AI-ஐ பலர் தங்களுக்குத் தேவையான வகையில் உருவாக்கிக் கொள்கிறார்கள். இன்னும் திறம்பட உருவாக்கிப் பயன்படுத்துகிறார்கள். இவைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. இது ஆபத்தானது என்று அவர் கூறியிருந்தார். தற்போது AI தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. மனிதர்களை விட AGI வேகமாக வேலை செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

கடுமையான நெருக்கடியான நாட்கள் வரவிருக்கின்றன

வேலைவாய்ப்புத் துறையில் ஏற்படும் பெரிய மாற்றங்களால் கடுமையான நெருக்கடிகள் ஏற்படும். மனநலப் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள், குடும்பப் பிரச்சினைகள் என அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வரும். புதிய வேலைவாய்ப்பு உருவானாலும், அது குறைவாகவே இருக்கும். வேலை இழக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். எனவே, சூழ்நிலைகள் மாறும்போது உருவாகும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கவ்தாத் அறிவுறுத்தியுள்ளார்.