virudhunagar got first place in sslc exams
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 8ம் தேதி தொடங்கி 31ம் தேதி முடிவடைந்தது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதினர். இதில், 4 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேர் மாணவர்களும் 4 லட்சத்து 95 ஆயிரத்து 784 பேர் மாணவிகளும் தேர்வு எழுதினர்.

இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 39 ஆயிரத்து 741 பேரும் எழுதியுள்ளனர்.இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 94.4 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் விருதுநகர் மாவட்டம் 98.55 % தேர்ச்சி விகிதம் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.
கன்னியாக்குமரி 98.17 % தேர்ச்சி விகிதம் பெற்று இரண்டாவது இடத்தையும், 98.16 % தேர்ச்சி விகிதம் பெற்று ராமநாதபுரம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
