தமிழகத்தில் அடுத்தடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சேலம்‌,தர்மபுரி, திருச்சி, தஞ்சாவூர்‌, பெரம்பலூர்‌, நாமக்கல்‌ ஆகிய மாவட்டங்களில்‌ நாளை கன முதல்‌ மிக கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. 

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,

13.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம்‌, திருப்பத்தூர்‌, வேலூர்‌, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌, கடலூர் மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

14.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னுடன் கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சேலம்‌, தர்மபுரி, திருச்சி, தஞ்சாவூர்‌, பெரம்பலூர்‌, நாமக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு
இடங்களில்‌ கன முதல்‌ மிக கன மழையும்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, thiருவண்ணாமலை, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய
வாய்ப்புள்ளது.

15.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌,
கோவை, நீலகிரி, கரூர்‌, நாமக்கல்‌, சேலம்‌, திருச்சி, அரியலூர்‌, பெரம்பலூர்‌,புதுக்கோட்டை மற்றும்‌ ஈரோடு மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

16.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி , திண்டுக்கல்‌, ஈரோடு, சேலம்‌, நாமக்கல்‌ மற்றும்‌ கரூர்‌
மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

17.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர்‌, திண்டுக்கல்‌ மற்றும்‌ தேனி
மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

13.05.2022. 14.05.2022: கேரளா, இலட்ச தீவு, குமரிக்கடல்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா, இலங்கை கடற்கரை மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

17.05.2022: குமரிக்கடல்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா, இலங்கை கடற்கரை மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்துல்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாளில்‌ மீனவர்கள்‌ இப்பகுதுகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.