திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு வயது குழந்தை வண்டு கடித்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தரையில் கிடந்த வண்டை விழுங்கியதால் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் சக்தி நகர் பகுதியில் ஒரு வயது குழந்தை மூச்சுக்குழாயில் வண்டு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சக்தி நகரைச் சேர்ந்தவர் குகஸ்ரீ (1). நேற்று மாலை குகஸ்ரீ வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது தரையில் கிடந்த ஒரு வண்டை எடுத்து விழுங்கியதாக தெரிகிறது. வண்டு குழந்தையின் மூச்சுக்குழாய்க்குள் சென்று கடித்ததால், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த சோகமான சம்பவம் உணர்த்துகிறது. குழந்தைகளின் அருகில் வண்டுகள், பூச்சிகள் மற்றும் சிறிய பொருட்களை கவனக்குறைவாக வைத்திருப்பது இதுபோன்ற விபரீத சம்பவங்களுக்கு வழிவகுக்கும் என்பதால், பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.