செல்லூர் ராஜுக்கு எதிராக "தெர்மாகோல்" விட்டு போராட்டம்..!
ரஜினியால் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது வேண்டுமானால் காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம் என தெரிவித்த தெர்மோகோல் புகழ் அமைச்சர் செல்லூர் ராஜூக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தெரிவித்து புதுக்கோட்டையில் தெர்மாகோல் விடும் போராட்டம் நடைபெற்றது.
ரஜினி குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ரஜினியால் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது.வேண்டுமானால் காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம் என்றார்.இதற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது
இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூவைக் கண்டித்து புதுக்கோட்டையில் நகரத்தார் சமூகத்தினர் தெர்மாகோல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைச்சர் செல்லூர் ராஜூ வைகையில் தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மாகோலை கொண்டு மூடினார். இதன் மூலம் பிரபலத்தின் உச்சிக்கே சென்று உலக அளவில் புகழ் பெற்றார்.
அன்று முதல் அமைச்சர் செல்லூர் ராஜு தெர்மோகோல் புகழ் என அழைக்கப்பட்டார். இந்நிலையில் இவருடைய பேசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக,புதுக்கோட்டையில் தெர்மாகோல் விடும் போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.