மகிழ்ச்சி செய்தி.. இனி குறைந்த விலையில் தக்காளி.. தமிழக அரசு எடுத்த அதிரடி..
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கத்த்தின் கீழ் செயல்பட்டும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் இதுவரை 18 மெட்ரிக் டன் தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிசந்தையில் விலை கட்டுக்குள் வரும் வரையில் நுகர்வோர் கடைகளில் விற்பனை தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கத்த்தின் கீழ் செயல்பட்டும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் இதுவரை 18 மெட்ரிக் டன் தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிசந்தையில் விலை கட்டுக்குள் வரும் வரையில் நுகர்வோர் கடைகளில் விற்பனை தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையினால் கோயம்பேடு சந்தையில் தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால், விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 120 ரூபாய் விற்பனை செய்யபடுகிறது.தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக தக்காளியின் விலை ரூ.100 தாண்டியுள்ள நிலையில், குறைந்த விலையில் தக்காளியை பொதுமக்களுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் படிக்க: இந்து கடவுளை விமர்சிக்கும் U2 Brutus..!முதலமைச்சர் அமைதி காப்பது அதிர்ச்சி அளிக்கிறது- ஓபிஎஸ் கண்டனம்
பருவமழை காரணமாக தக்காளியின் விலை வெளிச்சந்தையில் உயர்ந்துள்ளதை கட்டுப்படுத்தும் வகையில் மக்களுக்கு மலிவு விலையில் தரமான தக்காளி கிடைக்கப்பெற, தமிழக அரசு கூட்டுறவுத்துறையின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளில் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது.
இந்நிலையில் இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” பருவமழை காரணமாக தக்காளியின் விலை வெளிச்சந்தையில் உயர்ந்துள்ளதை கட்டுப்படுத்தும் வகையில் மக்களுக்கு மலிவு விலையில் தரமான தக்காளி கிடைக்கப்பெற, தமிழக அரசு கூட்டுறவுத்துறையின் 65 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளியின் வெளிசந்தை விலை கட்டுப்படுத்தப்படும் வரை இந்த நடவடிக்கை தொடரும். மேலும் தேவையின் அடிப்படையில் நியாயவிலைக் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 23.05.2022 வரை 18 மெட்ரிக் டன் தக்காளி ரூ.0.15 கோடி மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது..? ஜூன் மாத இறுதியில் திறப்பு.. ? அமைச்சர் இன்று அறிவிக்கிறார்..