Asianet News TamilAsianet News Tamil

சேலம் அருகே போலி மருத்துவர் கைது - போலிசார் அதிரடி...

The police have arrested a police officer in West Bengal near Omalur in Salem district.
The police have arrested a police officer in West Bengal near Omalur in Salem district.
Author
First Published Jul 31, 2017, 6:13 PM IST


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த போலி மருத்துவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகமாக போலி மருத்துவர்கள் இருப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதை அடுத்து தாரமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் தலைமையிலான குழுவினர் ஓமலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

பாரக்கல்லூர் சாலையில் உள்ள மருத்துவ கிளினிக்கில் மருத்துவ குழு ஆய்வு செய்தனர்.

அப்போது, அதன் மருத்துவரான மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ராணாஜித் பிஸ்வாஸ் என்பவர் 12ஆம் வகுப்பு மட்டும் படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த போலி மருத்துவரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios