The incident has triggered a suicide by a couple of Puducherry couples drinking poison.

புதுச்சேரியைச் சேர்ந்த தம்பதியினர் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

புதுச்சேரியைச் சேர்ந்த தம்பதியினர் தங்கள் 15 வயது மகளுடன் திருப்பூர் பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அப்போது அங்கிருந்த கடையில் குளிர்பானம் வாங்கி அதில், விஷத்தைக் கலக்கி குடித்துள்ளனர். 

சில நிமிடங்களிலேயே, வாயில் நுரைதள்ளி மயக்கமடைந்து தம்பதியினர் கீழே விழுந்தனர். இதைபார்த்த அங்கிருந்தவர்கள் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் அவர்களது மகள் திருப்பூரில் உள்ள சிறுவர் இல்லத்தில் சேர்த்தனர். 

இதையடுத்து விசாரணையில், அவர்களது மகளின் நண்பர் அவரை கற்பழித்ததால் அவர் கர்ப்பமடைந்ததும், அதை பெற்றோர்கள் கலைத்ததும் தெரியவந்துள்ளது.