11:36 PM (IST) Oct 29

அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி.. வானதி சீனிவாசன் தொகுதியில் கிடையாது - அமைச்சசர் செந்தில் பாலாஜி ஆவேசம்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

மேலும் படிக்க

11:12 PM (IST) Oct 29

பசும்பொன்னில் சாகும்வரை உண்ணாவிரதம்.. கருணாஸ் எடுத்த அதிரடி முடிவு - பரபரப்பு பின்னணி !

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் நடிகர் கருணாஸ் திடீர் உண்ணாவிரதத்தை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

10:11 PM (IST) Oct 29

இந்துத்துவா பிரச்சாரம் செய்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி! கொந்தளிக்கும் வைகோ - பின்னணி என்ன ?

சனாதன தர்மம் தான் இந்த நாட்டினுடை இலக்கியம் என்கிறார். திருக்குறள் பற்றி சொல்கிறார். சனாதனவாதியா மாறி, இந்துத்துவா பிரச்சார காரராக மாறிவிட்டார் என்று ஆளுநர் ஆர்.என் ரவியை கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

மேலும் படிக்க

09:45 PM (IST) Oct 29

நண்பர்களுடன் ஆற்றில் குளித்த மாணவன்.. நீரில் மூழ்கி பலியான சம்பவம்

புதுச்சேரி அரியாங்குப்பம் ஆற்றில் நண்பர்களுடன் குளித்து பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

09:42 PM (IST) Oct 29

வதோதராவில் உள்ள சி-295 தயாரிப்பு வசதி - மேக் இன் இந்தியா திட்டத்தின் அடுத்த கட்டம்

நாளை (அக்டோபர் 30, 2022) டாடா-ஏர்பஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சி295 ராணுவப் போக்குவரத்து விமானங்களைத் தயாரிக்கும் வசதிக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவுள்ள நிலையில், ராணுவப் போக்குவரத்து விமானங்களைத் தயாரிக்கும் திறன் கொண்ட நாடுகளில் இந்தியாவும் நுழையும். 

மேலும் படிக்க

08:25 PM (IST) Oct 29

மகள் போட்ட டீயை குடித்த குடும்பம்.. 5 பேர் பலியான விபரீதம் - வெளியான அதிர்ச்சி காரணம்

மகள் போட்ட டீயை குடித்த 5 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

07:33 PM (IST) Oct 29

மதுரை உசிலம்பட்டியில் தெரிந்த எலான் மஸ்க்கின் சாட்டிலைட் - இணையத்தில் வைரலாகும் சூப்பர் வீடியோ !!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் இரவு 7 மணியளவில் திடீரென விண்ணில் தோன்றிய வால் நட்சத்திரம் போன்ற ஒளியை பலரும் கண்டு வியந்தனர். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

07:04 PM (IST) Oct 29

அண்ணாமலை தொடர்ந்து அவதூறு பரப்புகிறார்! இதெல்லாம் அபத்தம் - எச்சரித்த தமிழ்நாடு காவல்துறை !!

பி.ஜே.பி மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார் என்று தமிழ்நாடு காவல்துறை குற்றஞ்சாட்டி உள்ளது.

மேலும் படிக்க

06:18 PM (IST) Oct 29

வயிற்று வலிக்கு போன சிறுமி கர்ப்பம்.. டாக்டர்கள் ஷாக் - 4 பேரை அலேக்காக தூக்கிய போலீஸ்

15 வயது சிறுமி கர்ப்பமான சம்பவம் சென்னையில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க

05:13 PM (IST) Oct 29

கோவை செல்கிறார் அண்ணாமலை.. அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் !!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை மறுநாள் கோவை செல்லவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

04:48 PM (IST) Oct 29

காயத்ரி ரகுராம் செய்தியாளர் சந்திப்பின்போது கோவையில் பத்திரிக்கையாளர்களுடன் பாஜகவினர் வாக்குவாதம்.!

காயத்ரி ரகுராம் செய்தியாளர் சந்திப்பின்போது கோவையில் பத்திரிக்கையாளர்களுடன் பாஜகவினர் வாக்குவாத செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க

04:15 PM (IST) Oct 29

அரியவகை நோய் பாதிப்பு... நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி

நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை பதிவிட்டு, தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றியும் விவரித்துள்ளார். அதன்படி தான் myositis என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி உள்ளார். விரைவில் இதிலிருந்து நலம்பெற்று திரும்பி வருவேன் எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவர் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர். மேலும் படிக்க

03:12 PM (IST) Oct 29

எலான் மஸ்க் அவர்களே... ட்விட்டர் மூலம் உலக நாகரிகத்தை ஒழுங்கு படுத்துங்கள் - கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்

அடுத்தடுத்து ட்விட்டரில் புதிய நடைமுறைகளைக் கொண்டுவர திட்டமிட்டுள்ள எலான் மஸ்க் அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இதனால் அவர் டுவிட்டரில் என்னென்ன மாற்றங்களை கொண்டுவர போகிறார் என்பதை தெரிந்துகொள்ள அதன் பயனர்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றனர். 

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் அதிபராகி உள்ள எலான் மஸ்க்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து அவருக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்துள்ளார். மேலும் படிக்க

02:38 PM (IST) Oct 29

துணிவு படத்தின் ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்.. ரிலீசுக்கு முன்பே அஜித் படத்துக்கு குவியும் வசூல்

அஜித்தின் துணிவு படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது உறுதியாகி உள்ள நிலையில், தற்போது அப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் படிக்க

01:35 PM (IST) Oct 29

சினிமாவையே மிஞ்சிய தரமான சம்பவம்.. தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை தடுத்து நிறுத்திய நிறைமாத கர்ப்பிணி.!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே ஒட்டுபட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன். ஆட்டோ டிரைவர். இவரது மூத்த மகள் நாகபிரியா (30). இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார்.

மேலும் படிக்க

01:35 PM (IST) Oct 29

குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

01:32 PM (IST) Oct 29

நான் உண்மையை சொன்னால் பல உயர் அதிகாரிகளின் பதவி பறிபோகும்.. கோவை சம்பவம் குறித்து பகீர் கிளப்பும் அண்ணாமலை.!

கோவையில் முழு கடையடைப்புக்கு பாஜக மாநில தலைமை நிர்பந்திக்காது. கோவை பந்த் குறித்து மாவட்ட பாஜக மற்றும் மக்கள் முடிவு செய்ய வேண்டும். கோவை வழக்கை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்காமல் 4 நாட்கள் தாமதப்படுத்தியது ஏன்? மத்திய அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என டிஜிபி கூறுகிறார். அக்டோபர் 18ம் தேதியே மத்திய உளவுத்துறை மாநில அரசுக்கு தகவல் கொடுத்துள்ளது. 18ம் தேதி தகவல் வந்தும் ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி அண்ணாமலை எழுப்பியுள்ளார். 

மேலும் படிக்க

12:00 PM (IST) Oct 29

10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் இளைஞருக்கு ரூ.20ஆயிரம் அபராதமா? ஆர்.பி. உதயகுமார் குமுறல்..!

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை என்ற பெயரில் இளைய சமுதாயத்திடம் மறைமுகமாக பொருளாதார சுரண்டலை நடத்தி வருவதை திமுக அரசு தடுத்து நிறுத்திட முன்வருமா? என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் படிக்க

10:17 AM (IST) Oct 29

ரிலீசாகி ஒரு வாரம் தான் ஆகுது... அதற்குள் இப்படியா..! பரிதாப நிலையில் சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’

பிரின்ஸ் படம் ரிலீசாகி ஒரு வாரம் ஆகும் நிலையில், தமிழகம் முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து அப்படத்தை தூக்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

08:55 AM (IST) Oct 29

இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடி உடைப்பு

சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.