TamilNews Highlights: கள்ளக்குறிச்சி மாணவி வீடியோக்களை வெளியிடாதீர்.. சிபிசிஐடி எச்சரிக்கை

Tamil News live updates today on august 5 2022

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வீடியோக்களை வெளியிட வேண்டாம் என சிபிசிஐடி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் தனிநபரோ அல்லது நிறுவனமோ புலன் விசாரணையில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிபிசிஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

10:38 PM IST

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் திருப்பம்... புதிய நீதிபதி நியமனம்!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தனிநீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரையை ஏற்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க

10:26 PM IST

அதிமுக வழக்கில் திருப்பம்.. புதிய நீதிபதி நியமனம் !!

அதிமுக பொதுக்குழு வழக்குகளை விசாரிக்க புதிய நீதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

6:47 PM IST

பிரதமர் மோடியை திடீரென சந்தித்த மம்தா

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

6:46 PM IST

ஆகஸ்ட் 10 - பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை !

வரும் ஆகஸ்ட் 10ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க

6:45 PM IST

டிஎஸ்பி ஆன டீக்கடைக்காரர் மகள் - குவியும் பாராட்டுக்கள் !

அடிப்படை வசதி இல்லாத கிராமத்தில் இருந்து படிப்பை மூலதனமாக கொண்டு டிஎஸ்பி ஆக உயர்ந்திருக்கிறார் டீக்கடைக்காரர் மகள்.

மேலும் படிக்க

6:44 PM IST

நீதிபதியிடம் மன்னிப்பு கேட்ட ஓபிஎஸ் தரப்பு !

 உயர் நீதிமன்றத்தில் இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கேட்டுள்ளனர்.

மேலும் படிக்க

3:31 PM IST

உஷார் !! நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழை.. 6 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

3:30 PM IST

விடாது வெளுக்கும் கனமழை.. ஆறுகளில் காட்டாற்று வெள்ளம்.. நிரம்பிய முக்கிய அணைகள்.. தற்போதைய அப்டேட்..

பவானிசாகர் அணை 102 அடியை எட்டியதால், அணையிலிருந்து வினாடிக்கு 7,350 கன அடி நீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால், கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

3:28 PM IST

தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

ஆதி திராவிடர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளராக டி.எஸ்.ஜவஹர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளராக மங்கத் ராம் சர்மா, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளராக மணிவாசன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

3:03 PM IST

ஜெயம் ரவி உடன் ரொமான்ஸ் பண்ண ரெடியான பிரியங்கா மோகன் - அதுவும் யார் டைரக்‌ஷன்ல தெரியுமா?

தமிழில் இதுவரை இவர் நடிப்பில் ரிலீஸான 3 படங்களும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளன. இதனால் பிரியங்கா மோகனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வரும் பிரியங்கா, தற்போது மேலும் ஒரு தமிழ் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகி உள்ளார்.மேலும் படிக்க

2:26 PM IST

மீண்டும் நிர்வாணமாக நடிக்க ரன்வீர் சிங்குக்கு பிரபல நிறுவனம் அழைப்பு

நடிகர் ரன்வீர் சிங்கை மீண்டும் நிர்வாணமாக நடிக்க பீட்டா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அந்த அமைப்பின் விளம்பரத்திற்காக நிர்வாணமாக நடிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதனை ஏற்று ரன்வீர் சிங் மீண்டும் பிறந்தமேனிக்கு நிர்வாணமாக நடிப்பாரா அல்லது மறுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பீட்டா என்பது விலங்கு வதைகளைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். குறிப்பாக ஜல்லிக்கட்டுக்கு சில ஆண்டுகள் தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டதற்கும் இந்த அமைப்பு தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க

1:58 PM IST

இந்திய டிரம்ஸ் கலைஞரின் வீடியோவை உலகளவில் வைரலாக்கிய ஜஸ்டின் ஃபீபர்

வட மாநிலத்தில் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் இசைக் கலைஞர் ஒருவர் டிரம்ஸ் வாசித்த வீடியோ ஒன்று கடந்த மாதம் 6-ந் தேதி இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ பதிவிட்ட ஒரு மாதத்திற்கு பிறகு மிகப்பெரிய அளவில் வைரல ஆகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பிரபல பாப் இசைக் கலைஞர் ஜஸ்டின் ஃபீபர் தான்.மேலும் படிக்க

1:13 PM IST

5ஜியை தொட்ட நீ கெட்ட.. தூள்ளி குதித்து வந்து 2ஜி வழக்கை தூசு தட்டிய சிபிஐ.. ஆ.ராசவுக்கு எதிராக முறையீடு

5ஜி அலைக்கற்றையில் ஏலத்தில் முறைகேடு நடைபெற்றதாக ஆ.ராசா புகார் கூறிய நிலையில், 2ஜி வழக்கை தினந்தோறும் விசாரிக்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டுள்ளது.

மேலும் படிக்க...

12:07 PM IST

கடலுக்கடியில் பேனர் வைத்து அதகளம் செய்த அஜித் ரசிகர்கள் - வைரல் வீடியோ

நடிகர் அஜித், சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக புதுச்சேரியை சேர்ந்த அஜித் ரசிகர்கள் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதன்படி கடலுக்கடியில் 100 அடி ஆளத்தில் நடிகர் அஜித்தின் பேனரை வைத்து கெத்து காட்டி உள்ளனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

11:50 AM IST

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் மோடி கபடி லீக் விளையாட்டு போட்டி.. பரிசுத்தொகை 35 லட்சம்

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் மோடி கபடி லீக் விளையாட்டு போட்டி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத்தொகை 35 லட்சம் என அமர்பிரசாத்ரெட்டி தெரிவித்துள்ளார். 

11:37 AM IST

வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்களுக்கு 270 நாட்கள் விடுமுறை

வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 270 நாட்கள் விடுமுறை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

11:15 AM IST

மக்களே உஷார்.. வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. புயலாக உருவாகுமா..? வானிலை மையம் அறிவிப்பு..

வட மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

 

10:23 AM IST

மோடியின் கோரிக்கையை ஏற்ற எடப்பாடி பழனிசாமி...! அதிமுக தொண்டர்களுக்கு திடீர் உத்தரவிட்ட இபிஎஸ்

சுதந்திர தினத்தையொட்டி வீடுகளில் தேசிய கொடி பறக்க விட வேண்டும் என பிரதமர் மோடி விடுத்த அழைப்பினை ஏற்று அனைவரின் வீடுகளுக்கு முன்பும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க...

10:21 AM IST

கியூட் நுழைவுத்தேர்வு தொழில்நுட்ப காரணங்களால் ரத்து - தேசிய தேர்வு முகமை

மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்காக மாணவர்கள் CUET எனும் நுழைவுத்தேர்வை இந்த கல்வியாண்டு முதல் நடத்தப்படுகிறது.  இந்நிலையில் CUET யின் 2ம் கட்ட நுழைவுத்தேர்வு நேற்று (ஆகஸ்ட் 4) தொடங்கியது.  இந்நிலையில் நிர்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் 2வது ஷிப்ட்டில் நடைபெற இருந்த தேர்வு அனைத்து மையங்களிலும் ரத்து செய்யப்பட்டதாகவும், மாற்றுதேதியில் தேர்வு நடத்தப்படுமென்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

10:15 AM IST

பிரைட் ரைசில் புழு... சென்னையில் பிரபல உணவகத்திற்கு ஆப்பு

சென்னையில்  உள்ள பர்வீன் ஃபாஸ்ட் புட் கடையில் சாப்பிட்ட பீப் பிரைட் ரைஸில் புழு இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

மேலும் படிக்க

9:12 AM IST

அசத்திய மதுரை அரசு பள்ளி மாணவிகள்..! இஸ்ரோ ராக்கெட்டிற்கான சிப்பை தயாரித்து வெற்றி...நேரில் பாராட்டிய அமைச்சர்

இஸ்ரோ ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா திட்டத்தில் SSLVக்கான சிப்பை உருவாக்கியதற்காக தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட மதுரை திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகளை பள்ளிகல்வித்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் படிக்க..

9:04 AM IST

திருமகளின் அருள் கிடைக்க வரலட்சுமி விரதம் நாளில்..பூஜை அறையில் மறக்காமல் கேட்க வேண்டிய 7 சிறந்த பக்தி பாடல்கள்

Varalakshmi Vratham 2022: வரலட்சுமி விரதத்தின் போது இன்று அன்னை மகாலட்சுமியை முழுமனதுடன் மனதார தியானிக்க கேட்க வேண்டிய பக்தி பாடல்களின் தொகுப்பு இங்கே பார்த்து தெரிந்து வைத்து கொள்வோம். 

மேலும் படிக்க

9:02 AM IST

Varalakshmi: வரலட்சுமி விரதம் பூஜையில் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத 5 விஷயங்கள், கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

Varalakshmi Vratham 2022: பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி விரதமான இன்று செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத 5 விஷயங்கள் என்னென்னெ என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க

9:01 AM IST

நடிகை ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம்...!

நடிகை ஹன்சிகா திருமணத்துக்கு தயாராகி வருவதாக திரையுலக வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. காதல் எதுவும் செட் ஆகாததால் வீட்டில் பார்க்கும் பையனுக்கே ஓகே சொல்லிவிட்டாராம் ஹன்சிகா. அதன்படி அவருக்கு பிரபல அரசியல்வாதியின் மகனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க

8:51 AM IST

மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்கி செல்பி எடுக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

8:42 AM IST

சென்னை மக்களுக்கு முக்கிய தகவல்.. நாளை இந்த பகுதிகளில் 5 மணிநேரம் கரண்ட் இருக்காது..!

பராமரிப்புப் பணி காரணமாக நாளை சென்னையின் முக்கிய பகுதிகளான அண்ணா சாலை, பெரம்பூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

8:41 AM IST

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து கொச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணிக்கு அறிகுறி தென்பட்டுள்ளது.  

7:59 AM IST

யாரையும் சும்மா விடாதீங்க! தற்கொலை செய்த கோவை மாணவி வழக்கு! 9 மாதங்களுக்கு பிறகு 2 முதியவர்கள் போக்சோவில் கைது

ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, எலிசா சாருவோட அப்பா, ரீத்தாவோட தாத்தா உள்பட யாரையும் சும்மா விடக்கூடாது கூறப்பட்டிருந்தது. மாணவி தற்கொலை தொடர்பாக போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் இயற்பியல் ஆசிரியர் மிதுன்சக்கரவர்த்தி (31) மற்றும் புகார் கொடுத்தும் அலட்சியமாக செயல்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டார். 

மேலும் படிக்க

7:58 AM IST

பேருந்து மீது அசுர வேகத்தில் மோதிய கார்!தூக்கி வீசப்பட்ட இன்ஜின்!சிதறிய 4 பேர் உடல்கள்! கலங்க வைக்கும் சம்பவம்

திருப்பூர் அருகே தனியார் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  

மேலும் படிக்க

7:58 AM IST

பேராசிரியர் மீது தாக்குதல்.. 4 மாணவர்கள் சஸ்பெண்ட்

தூத்துக்குடி, கோவில்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியரை 4 மாணவர்கள் தாக்கிய விவகாரம் தொடர்பாக  கல்லூரி பேராசிரியர் மற்றும் 4 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து உயர் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

7:56 AM IST

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சுதந்திர தினவிழா ஒத்திகை காரணமாக ஆகஸ்ட் 06, 11, 13 ஆகிய தேதிகளில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை போக்குவரத்தில் மாற்றம் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 

7:55 AM IST

நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

7:54 AM IST

தமிழகம், கேரளா உள்ளிட்ட 3 மாநிலங்களில் 3 நாட்களுக்கு கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

7:52 AM IST

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.. தலைமைச் செயலாளர் இறையன்பு

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

7:41 AM IST

துல்கர் சல்மானின் ‘சீதாராமம்’ படத்திற்கு திடீரென தடை விதிப்பு

சீதாராமம் படம் இன்று உலகமெங்கும் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரபு நாடுகளில் மட்டும் இப்படம் ரிலீசாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. சீதாராமம் படத்தில் முஸ்லீம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமான காட்சிகள் உள்ளதால் இப்படத்திற்கு கத்தார், குவைத், சவுதி அரேபியா, ஓமன் போன்ற அரபு நாடுகளில் ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடைசியாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான குரூப் படத்திற்கும் அங்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.மேலும் படிக்க

7:24 AM IST

வெளுத்து வாங்கி வரும் கனமழை.. 6 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை

தொடர் கனமழை காரணமாக கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  திருச்சூர், ஆலப்புழா, பாலக்காடு, கோட்டயம், பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

7:23 AM IST

Varalakshmi Vratham 2022 : மாங்கல்ய பலம் தரும் வரலக்ஷ்மி நோம்பு...உருவான கதை

அனைத்து செல்வங்களையும் மாங்கல்ய பலத்தையும் அள்ளித் தரக்கூடிய வரலட்சுமி நோன்பு இந்து பெண்களால் கொண்டாடப்படுகிறது. 16 வகையான செல்வங்களுக்கும் அதிபதியான லட்சுமி தேவியின் அருள் வேண்டி இந்த நோன்பு அனுசரிக்கப்படுகிறது. ஆடி மாதம் வளர்பிறையில் முழு நிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிகிழமை சுமங்கலி பெண்கள் தங்கள் கணவன் நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் செல்வத்தோடும் இருக்க தாலி பாக்கியம் நிலைக்கவும் இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை கடைபிடிக்கின்றனர்.

மேலும் படிக்க

7:22 AM IST

வரம் தரும் வரலட்சுமி விரதம்! பூஜை செய்ய சிறந்த நேரங்கள் மற்றும் பூஜை முறைகள் இதோ!

வளங்களையும், வரங்களையும் அள்ளித்தரும் வரலட்சுமியை மனதில் நினைத்து எடுக்கப்படும் வரலட்சுமி விரதம் (அல்லது) வரலட்சுமி நோம்பு எடுப்பதற்கு சிறந்த நேரம் மற்றும் பூஜை முறைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேலும் படிக்க

7:22 AM IST

திருமகளின் அருள் கிடைக்க வரலட்சுமி விரதம் நாளில்..பூஜை அறையில் மறக்காமல் கேட்க வேண்டிய 7 சிறந்த பக்தி பாடல்கள்

Varalakshmi Vratham 2022: வரலட்சுமி விரதத்தின் போது அன்னை மகாலட்சுமியை முழுமனதுடன் மனதார தியானிக்க கேட்க வேண்டிய பக்தி பாடல்களின் தொகுப்பு இங்கே பார்த்து தெரிந்து வைத்து கொள்வோம். 

மேலும் படிக்க

7:21 AM IST

Horoscope Today: இன்றைய 12 ராசிகளின் துல்லிய பலன்கள்....இந்த ராசிகளுக்கு பொருளாதார ரீதியாக வியாபாரம் பெருகும்

Horoscope Today- Indriya Rasipalan 2022:பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, கிரகங்கள் ராசி மாற்றம் நட்சத்திர பெயர்ச்சி 12 ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அப்படியாக யாருக்கு என்னென்னெ பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். 

மேலும் படிக்க

10:38 PM IST:

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தனிநீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரையை ஏற்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க

10:26 PM IST:

அதிமுக பொதுக்குழு வழக்குகளை விசாரிக்க புதிய நீதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

6:47 PM IST:

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

6:46 PM IST:

வரும் ஆகஸ்ட் 10ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க

6:45 PM IST:

அடிப்படை வசதி இல்லாத கிராமத்தில் இருந்து படிப்பை மூலதனமாக கொண்டு டிஎஸ்பி ஆக உயர்ந்திருக்கிறார் டீக்கடைக்காரர் மகள்.

மேலும் படிக்க

6:44 PM IST:

 உயர் நீதிமன்றத்தில் இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கேட்டுள்ளனர்.

மேலும் படிக்க

3:31 PM IST:

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

3:30 PM IST:

பவானிசாகர் அணை 102 அடியை எட்டியதால், அணையிலிருந்து வினாடிக்கு 7,350 கன அடி நீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால், கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

3:28 PM IST:

ஆதி திராவிடர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளராக டி.எஸ்.ஜவஹர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளராக மங்கத் ராம் சர்மா, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளராக மணிவாசன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

3:03 PM IST:

தமிழில் இதுவரை இவர் நடிப்பில் ரிலீஸான 3 படங்களும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளன. இதனால் பிரியங்கா மோகனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வரும் பிரியங்கா, தற்போது மேலும் ஒரு தமிழ் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகி உள்ளார்.மேலும் படிக்க

2:26 PM IST:

நடிகர் ரன்வீர் சிங்கை மீண்டும் நிர்வாணமாக நடிக்க பீட்டா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அந்த அமைப்பின் விளம்பரத்திற்காக நிர்வாணமாக நடிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதனை ஏற்று ரன்வீர் சிங் மீண்டும் பிறந்தமேனிக்கு நிர்வாணமாக நடிப்பாரா அல்லது மறுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பீட்டா என்பது விலங்கு வதைகளைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். குறிப்பாக ஜல்லிக்கட்டுக்கு சில ஆண்டுகள் தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டதற்கும் இந்த அமைப்பு தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க

1:58 PM IST:

வட மாநிலத்தில் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் இசைக் கலைஞர் ஒருவர் டிரம்ஸ் வாசித்த வீடியோ ஒன்று கடந்த மாதம் 6-ந் தேதி இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ பதிவிட்ட ஒரு மாதத்திற்கு பிறகு மிகப்பெரிய அளவில் வைரல ஆகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பிரபல பாப் இசைக் கலைஞர் ஜஸ்டின் ஃபீபர் தான்.மேலும் படிக்க

1:13 PM IST:

5ஜி அலைக்கற்றையில் ஏலத்தில் முறைகேடு நடைபெற்றதாக ஆ.ராசா புகார் கூறிய நிலையில், 2ஜி வழக்கை தினந்தோறும் விசாரிக்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டுள்ளது.

மேலும் படிக்க...

12:07 PM IST:

நடிகர் அஜித், சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக புதுச்சேரியை சேர்ந்த அஜித் ரசிகர்கள் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதன்படி கடலுக்கடியில் 100 அடி ஆளத்தில் நடிகர் அஜித்தின் பேனரை வைத்து கெத்து காட்டி உள்ளனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

11:50 AM IST:

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் மோடி கபடி லீக் விளையாட்டு போட்டி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத்தொகை 35 லட்சம் என அமர்பிரசாத்ரெட்டி தெரிவித்துள்ளார். 

11:37 AM IST:

வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 270 நாட்கள் விடுமுறை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

11:15 AM IST:

வட மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

 

10:23 AM IST:

சுதந்திர தினத்தையொட்டி வீடுகளில் தேசிய கொடி பறக்க விட வேண்டும் என பிரதமர் மோடி விடுத்த அழைப்பினை ஏற்று அனைவரின் வீடுகளுக்கு முன்பும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க...

10:21 AM IST:

மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்காக மாணவர்கள் CUET எனும் நுழைவுத்தேர்வை இந்த கல்வியாண்டு முதல் நடத்தப்படுகிறது.  இந்நிலையில் CUET யின் 2ம் கட்ட நுழைவுத்தேர்வு நேற்று (ஆகஸ்ட் 4) தொடங்கியது.  இந்நிலையில் நிர்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் 2வது ஷிப்ட்டில் நடைபெற இருந்த தேர்வு அனைத்து மையங்களிலும் ரத்து செய்யப்பட்டதாகவும், மாற்றுதேதியில் தேர்வு நடத்தப்படுமென்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

10:15 AM IST:

சென்னையில்  உள்ள பர்வீன் ஃபாஸ்ட் புட் கடையில் சாப்பிட்ட பீப் பிரைட் ரைஸில் புழு இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

மேலும் படிக்க

9:12 AM IST:

இஸ்ரோ ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா திட்டத்தில் SSLVக்கான சிப்பை உருவாக்கியதற்காக தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட மதுரை திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகளை பள்ளிகல்வித்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் படிக்க..

9:04 AM IST:

Varalakshmi Vratham 2022: வரலட்சுமி விரதத்தின் போது இன்று அன்னை மகாலட்சுமியை முழுமனதுடன் மனதார தியானிக்க கேட்க வேண்டிய பக்தி பாடல்களின் தொகுப்பு இங்கே பார்த்து தெரிந்து வைத்து கொள்வோம். 

மேலும் படிக்க

9:02 AM IST:

Varalakshmi Vratham 2022: பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி விரதமான இன்று செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத 5 விஷயங்கள் என்னென்னெ என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க

9:01 AM IST:

நடிகை ஹன்சிகா திருமணத்துக்கு தயாராகி வருவதாக திரையுலக வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. காதல் எதுவும் செட் ஆகாததால் வீட்டில் பார்க்கும் பையனுக்கே ஓகே சொல்லிவிட்டாராம் ஹன்சிகா. அதன்படி அவருக்கு பிரபல அரசியல்வாதியின் மகனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க

8:51 AM IST:

மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்கி செல்பி எடுக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

8:42 AM IST:

பராமரிப்புப் பணி காரணமாக நாளை சென்னையின் முக்கிய பகுதிகளான அண்ணா சாலை, பெரம்பூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

8:41 AM IST:

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து கொச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணிக்கு அறிகுறி தென்பட்டுள்ளது.  

7:59 AM IST:

ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, எலிசா சாருவோட அப்பா, ரீத்தாவோட தாத்தா உள்பட யாரையும் சும்மா விடக்கூடாது கூறப்பட்டிருந்தது. மாணவி தற்கொலை தொடர்பாக போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் இயற்பியல் ஆசிரியர் மிதுன்சக்கரவர்த்தி (31) மற்றும் புகார் கொடுத்தும் அலட்சியமாக செயல்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டார். 

மேலும் படிக்க

7:58 AM IST:

திருப்பூர் அருகே தனியார் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  

மேலும் படிக்க

7:58 AM IST:

தூத்துக்குடி, கோவில்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியரை 4 மாணவர்கள் தாக்கிய விவகாரம் தொடர்பாக  கல்லூரி பேராசிரியர் மற்றும் 4 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து உயர் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

7:56 AM IST:

சுதந்திர தினவிழா ஒத்திகை காரணமாக ஆகஸ்ட் 06, 11, 13 ஆகிய தேதிகளில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை போக்குவரத்தில் மாற்றம் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 

7:55 AM IST:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

7:54 AM IST:

தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

7:52 AM IST:

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

7:41 AM IST:

சீதாராமம் படம் இன்று உலகமெங்கும் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரபு நாடுகளில் மட்டும் இப்படம் ரிலீசாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. சீதாராமம் படத்தில் முஸ்லீம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமான காட்சிகள் உள்ளதால் இப்படத்திற்கு கத்தார், குவைத், சவுதி அரேபியா, ஓமன் போன்ற அரபு நாடுகளில் ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடைசியாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான குரூப் படத்திற்கும் அங்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.மேலும் படிக்க

7:24 AM IST:

தொடர் கனமழை காரணமாக கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  திருச்சூர், ஆலப்புழா, பாலக்காடு, கோட்டயம், பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

7:23 AM IST:

அனைத்து செல்வங்களையும் மாங்கல்ய பலத்தையும் அள்ளித் தரக்கூடிய வரலட்சுமி நோன்பு இந்து பெண்களால் கொண்டாடப்படுகிறது. 16 வகையான செல்வங்களுக்கும் அதிபதியான லட்சுமி தேவியின் அருள் வேண்டி இந்த நோன்பு அனுசரிக்கப்படுகிறது. ஆடி மாதம் வளர்பிறையில் முழு நிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிகிழமை சுமங்கலி பெண்கள் தங்கள் கணவன் நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் செல்வத்தோடும் இருக்க தாலி பாக்கியம் நிலைக்கவும் இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை கடைபிடிக்கின்றனர்.

மேலும் படிக்க

7:22 AM IST:

வளங்களையும், வரங்களையும் அள்ளித்தரும் வரலட்சுமியை மனதில் நினைத்து எடுக்கப்படும் வரலட்சுமி விரதம் (அல்லது) வரலட்சுமி நோம்பு எடுப்பதற்கு சிறந்த நேரம் மற்றும் பூஜை முறைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேலும் படிக்க

7:22 AM IST:

Varalakshmi Vratham 2022: வரலட்சுமி விரதத்தின் போது அன்னை மகாலட்சுமியை முழுமனதுடன் மனதார தியானிக்க கேட்க வேண்டிய பக்தி பாடல்களின் தொகுப்பு இங்கே பார்த்து தெரிந்து வைத்து கொள்வோம். 

மேலும் படிக்க

7:21 AM IST:

Horoscope Today- Indriya Rasipalan 2022:பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, கிரகங்கள் ராசி மாற்றம் நட்சத்திர பெயர்ச்சி 12 ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அப்படியாக யாருக்கு என்னென்னெ பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். 

மேலும் படிக்க