Asianet News TamilAsianet News Tamil

பயணிகளை தரக்குறைவாக நடத்தக்கூடாது - போக்குவரத்துத்துறை கடும் எச்சரிக்கை !

பேருந்தில் பயணிக்கும் பயணிகளை தரக்குறைவாக நடத்தினால், ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Strict action will be taken if the passengers traveling in the bus are mistreated Tn transport department order
Author
First Published Jul 3, 2022, 8:59 PM IST

பேருந்தில் இலவச பயணம் 

ஏழை, எளிய மக்கள் பெரும்பாலும் அரசு பேருந்துகளிலேயே பயணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு பேருந்தில் இலவசம் என்று அறிவித்தது. இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு பயணம் செய்யும் பயணிகளை அரசு பேருந்தின் சில ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மரியாதை குறைவாக பேசி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு.. செம ட்விஸ்ட்.! திரெளபதிக்கு ஓட்டு போடும் பிரேமலதா & சுதீஷ்.. எந்த பதவியிலும் இல்லையே எப்படி?

போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

இந்நிலையில் போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், ‘பயணிகள் மொத்தமாகவோ அல்லது ஒருவரோ பேருந்திற்காக நிற்கும் போது பேருந்தை நிறுத்தி அவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும். ஓட்டுநர் பேருந்தைக் குறித்த பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும். பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் பேருந்தை நிறுத்தக் கூடாது. 

Strict action will be taken if the passengers traveling in the bus are mistreated Tn transport department order

நடத்துநர்கள் வேண்டும் என்றே பேருந்தில் இடம் இல்லை எனப் பேருந்தில் ஏறும் பெண் பயணிகளை இறக்கி விடவோ அல்லது அவர்களிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ நடந்து கொள்ளக் கூடாது. வயது முதிர்ந்த பெண் பயணிகளுக்கு இருக்கையில் அமர உதவி புரிந்து, பெண் பயணிகளிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். 

மேலும் செய்திகளுக்கு.. மேயர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை.. ஒழுங்கா இருக்கணும் - வார்னிங் கொடுத்த மு.க ஸ்டாலின் !

நடத்துநர் & ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை

பெண் பயணிகள் ஏறும் போதும் இறங்கும் போதும் கண்காணித்து, அவர்களைப் பாதுகாப்பாகப் பேருந்தில் ஏற்றி இறக்க வேண்டும். பேருந்தைப் பக்கவாட்டில் நிறுத்தாமல், ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக நிறுத்த வேண்டும். பேருந்தில் பயணிகள் இறங்கி ஏறிய பின், நடத்துநரின் சமிக்ஞை கிடைத்தபின் கதவுகளை மூடிய நிலையில் தான் ஓட்டுநர் பேருந்தை இயக்க வேண்டும். 

அதேபோல், ஓட்டுநர் இடது பக்கவாட்டு கண்ணாடி மூலம் பயணிகள் யாரேனும் ஏறுகிறார்களா? அல்லது இறங்குகிறார்களா? என்பதைக் கவனமாகப் பார்த்து, அதன் பிறகு தான் பேருந்தை இயக்க வேண்டும். மாணவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் ஏறி, இறங்கும் போது கூடுதல் கவனமுடன் செயல்பட வேண்டும். முக்கியமாக, பேருந்து புறப்பட்ட பின், பயணிகள் ஓடி வந்தால், பேருந்தை நிறுத்தி அவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும்.

மீறினால் கடும் நடவடிக்கை 

மேலும், கதவுகள் இல்லாத பேருந்தில் பயணிகள் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது. பேருந்து நிறுத்தம் வருவதை முன் கூட்டியே குரல் மூலம் தெரிவித்து பயணிகள் இறங்கத் தயார்ப் படுத்தவும் வேண்டும். ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பேருந்தை இயக்கும் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது. இதனை மீறுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு.. அதிமுகவிடம் கோடி கணக்கில் பணம் இருக்கு.. கொள்கை தான் இல்லை - அதிமுகவை கலாய்த்த சீமான்

Follow Us:
Download App:
  • android
  • ios