ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ...!
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ...!
நாடே பெருத்த எதிர்பார்ப்பில் ஜல்லிகட்டுக்காக காத்திருக்கும் தருவாயில், தமிழகம் மட்டுமில்லாமல், இந்தியா முழுக்க ஆங்காங்கே, ஜல்லிகட்டுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
இந்நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஜல்லிகட்டுக்கு , தற்போது ஆதரவு குரலை கொடுத்துள்ளது. அதன்படி ,
”சங் பரிவார் அமைப்புகள்” :
”சங் பரிவார் அமைப்புகள்“ ஜல்லிக்கட்டுக்கு எதிராக ஆதரவு குரலை கொடுத்துள்ளது. மேலும் ஜல்லிகட்டுக்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளது இந்த அமைப்பு. அதன்படி, ஒட்டகம்,மாடு ,எருமை என விலங்குகளை கொன்று, கொண்டாடப்படுவது ஜல்லிக்கட்டு இல்லை. மாறாக , தமிழக மக்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு என ஆதரவு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர் , விலங்கினங்களை வணங்குவதன் மற்றொரு வடிவம் தான் ஜல்லிக்கட்டு எனவும், இந்த ஜல்லிக்கட்டால் , காளைகளுக்கு எந்த தீங்கும் ஏற்படுவது இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் நாடெங்கும் தொடர்ந்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகி வருகிறது.