மதுரை அலங்காநல்லுர்,அவனியாபுரம்,பாலமேட்டில் பதற்றம்…ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு…

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பொங்கல் அன்றும், மறுநாள் பாலமேடு, மூன்றாம் நாள் அலங்காநல்லூர் பகுதிகளில் வழக்கமாக ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தீர்ப்பளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்தது.

ஜல்லிக்கட்டு நடத்த வழியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றாலும் மத்திய அரசு தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறது. அதனால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய தீர வேண்டும் இளைஞர்கள் உறுதியாக உள்ளனர்.

இதைத் தொடர்ந்து அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. இதை தொடர்ந்து இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, ரேக்ளாரேஸ் உள்ளிட்டவை போன்ற எதுவும் நடந்து விடாமல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடைபெற்று வருகின்றன.

பதற்றமான பகுதிகளில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் வீடுகளை காவல் துறையினர் கண்காணித்து வருகின்றன. மேலும் காளைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.கிராமங்களில் சுழற்சி முறையில் 24 மணி நேர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்னனர்.

இதனிடையே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி அலங்காநல்லுர் அருகே பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறாததால் சோகமடைத்துள்ள கிராம பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்கால்லுர், பாலமேடு, அவனியாபுரம் நோக்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆர்வலர்கள் திரண்டு வந்து கொண்டிருப்பதால் மதுரை மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.