Anbumani : உடனடியாக விடுதலை செய்ய முதல்வர் ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கடந்த மாதம் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.

அகதிகள் விடுதலை

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். சிறப்பு முகாம் அகதிகள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. விடுதலை செய்தால் தாய்நாட்டுக்குச் சென்று சொந்தங்களுடன் வாழவே அவர்கள் விரும்புகின்றனர். 

அவர்களை காரணமே இல்லாமல் சிறப்பு முகாம்களில் அடைத்து வைப்பது மனித உரிமை மீறல் ஆகும். தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் நலனுக்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். சிறப்பு முகாம் அகதிகளும் ஈழத்தமிழர்கள் தான். காலவரையின்றி அவர்களை அடைத்து வைப்பது நியாயமல்ல. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய முதல்வர் ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கடந்த மாதம் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு.. AIADMK: ஓபிஎஸ் கொள்ளையடித்த பணம் புதுச்சேரியில் இருக்கு.. அதிமுக பிரமுகர் சொன்ன அதிர்ச்சி தகவல்

அன்புமணி ராமதாஸ்

இந்நிலையில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

Scroll to load tweet…

அதில், ‘திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் 16 பேரை தமிழக அரசு விடுதலை செய்திருக்கிறது. பல வாரங்களாக உண்ணாநிலை, போராட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்த அவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. சிறப்பு முகாம் அகதிகள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்ற அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கடந்த ஜூன் ஒன்றாம் தேதி வலியுறுத்தியிருந்தேன். 

மேலும் செய்திகளுக்கு.. ரம்ஜானுக்கும், கிறிஸ்துமஸுக்கும் வாழ்த்து சொல்வார்.. தீபாவளிக்கு சொல்லமாட்டார்! முதல்வரை சீண்டிய தமிழிசை

பாமகவின் கோரிக்கை

பாமகவின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. விடுதலை செய்யப்பட்ட அகதிகள் தாயகம் திரும்பவோ, தமிழகத்தில் வாழவோ விரும்பினால் அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். பொருளாதார நெருக்கடியால் தமிழ்நாட்டுக்கு வந்தவர்களையும் அகதிகளாக அறிவித்து உதவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு.. Online Fraud : மின் கட்டணம் செலுத்துங்க..வைரல் வாட்சப் லிங்க் -மக்களே உஷார்.!