வடகிழக்கு பருவமழை இன்னும் இரு தினங்களில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வரும் 26, 27 ஆகிய தேதிகளில் தமிழகம் , புதுச்சேரியில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குபருவமழைகடந்தவாரத்துடன் முடிவடைந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில்புயல்உருவாகிஒடிசாவைதாக்கியதால்காற்றுவீசும்திசையில்மாற்றம்ஏற்பட்டது. இதனால்எதிர்பார்த்தப்படிவடகிழக்குபருவமழைதொடங்குவதற்குதாமதம்ஏற்பட்டது, இந்நிலையில் காற்றின் திசையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதால் வட கிழக்கு பருவ மழை ஏற்கனவே அறிவித்தபடி வரும் 26 ஆம் தேதி தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது தென் மேற்கு பருவ காற்று திசை மாறி கிழக்கில் இருந்து வீசத் தொடங்கியுள்ளது என்றும் இதனால் நிச்சயமாக 26 ஆம் தேதி முதல் பருவ மழையை எதிர்பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாகவானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் , இலங்கைமற்றும்அதனைஒட்டியகடல்பகுதிகளில்மேலடுக்குசுழற்சிநிலவுகிறது. இதன்காரணமாகஇன்றுஇரவு தமிழகம், புதுச்சேரியில்ஒருசிலஇடங்களில்இடியுடன்கூடியமழைபெய்யலாம் என்றும் நாளை மற்றும்நாளைமறுநாள் ஆகிய தேதிகளில் மழைக்குவாய்ப்புஇல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் 26, 27 ஆகிய இரண்டு நாட்களில் தமிழகம் முழுவதும் கனமழைகொட்டித் தீர்க்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 
தமிழகத்தில்கடந்த 24 மணிநேரத்தில்சிதம்பரம், வானூர்தலா 9 செ.மீ., ஆனைக்காரன்சத்திரம் 8 செ.மீ., பாபநாசம், மரக்காணம், பேச்சிப்பாறை, சத்தியமங்கலம்தலா 7 செ.மீ., திருச்செந்தூர், தென்காசிதலா 6 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
