Asianet News TamilAsianet News Tamil

நெல்லை அருகே பயங்கர விபத்து ! கார் மீது லாரி மோதியதில் 5 பேர் பலி !!

நெல்லை அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

nellai accidnet  5 persons dead
Author
Nellai, First Published Apr 30, 2019, 9:05 AM IST

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த கரும்புளியூத்தில் தென்காசியில் இருந்து நெல்லை நோக்கி சென்ற காரும், நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 

இந்த சம்பவத்தில், காரில் இருந்த கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  வா மீது லாரி மோதியதும் உடனடியாக லாரி டிரைவர் அங்கிருந்து  தப்பியோடினார். 

nellai accidnet  5 persons dead

தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அந்த காரில் வந்தவர்கள் யார்? . எங்கு செல்கிறார்கள் ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios