நெல்லை அருகே பயங்கர விபத்து ! கார் மீது லாரி மோதியதில் 5 பேர் பலி !!
நெல்லை அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த கரும்புளியூத்தில் தென்காசியில் இருந்து நெல்லை நோக்கி சென்ற காரும், நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த சம்பவத்தில், காரில் இருந்த கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வா மீது லாரி மோதியதும் உடனடியாக லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடினார்.
தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அந்த காரில் வந்தவர்கள் யார்? . எங்கு செல்கிறார்கள் ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.