மாதந்தோறும் வேலையற்ற இளைஞர்களுக்கு அரசு உதவி தொகை ..!!
மாதந்தோறும் வேலையற்ற இளைஞர்களுக்கு அரசு உதவி தொகை ..!!
படித்து முடித்து வேலையில்லாத இளைஞர்கள் மாத உதவி தொகை பெற , விண்ணபிக்கலாம் என , திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல் ராஜ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் படித்து முடித்த வேலை இல்லாத இளைஞர்கள், அரசு உதவி தொகை பெற முடியும் என்பது குறிபிடத்தக்கது.
அரசு உதவி தொகை பெற தகுதி என்ன ?
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ௫ ஆண்டுகள் நிறைவு பெற்று இருக்க வேண்டும் அதாவது 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 31 குள் பதிவு செய்திருக்க வேண்டும்.
அதன்படி ,
9 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் : ரூ 100
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் : ரூ 150
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் : ரூ 200
பட்டபடிப்பு முடித்தவர்கள் : ரூ 300
நிபந்தனை :
வயது வரம்பு :
தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் : 45
இதர வகுப்பினர் : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் :
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் : ரூ 600
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் : ரூ 750
பட்டபடிப்பு முடித்தவர்கள் : ரூ 1000
குறிப்பு : 10 ஆண்டுகள் உதவி தொகை வழங்கப்படும்
விண்ணபிக்க கடைசி தேதி : பிப்ரவரி 28 (வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பம் தர வேண்டும் )