ஒன்பது பேரை மிதித்தே கொன்ற மக்னா யானை; மீண்டும் ஊருக்குள் புகுந்ததால் விவசாயிகள் பெரும் பீதி...
தேனி
ஒன்பது பேரை மிதித்த கொன்ற மக்னா யானை மீண்டும் விவசாயப் பகுதிக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இதனை அறிந்த விவசாயிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
மக்னா யானை மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது என்று வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வனச்சரகர் ஜீவனா சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த விவசாயிகள் மற்றும் மக்கள் மக்னா யானையால் உயிர்சேதம் ஏற்படும் முன்னர் அதனை பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.
ஒன்பது பேரை மிதித்த கொன்ற மக்னா யானை மீண்டும் விவசாயப் பகுதிக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது என்ற தகவலை கேட்டதில் இருந்து விவசாயிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.