Asianet News TamilAsianet News Tamil

சிறுத்தை தாக்கி 5 பேர் படுகாயம்... பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்...!

வாணியம்பாடி அருகே சிறுத்தை தாக்கியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

leopard attack 5 injured
Author
Tamil Nadu, First Published Dec 27, 2018, 2:44 PM IST

வாணியம்பாடி அருகே சிறுத்தை தாக்கியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

வாணியம்பாடி அடுத்த ஆம்பூர் பகுதிகளில் சிறுத்தைபுலி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் கூறிவந்தனர். நேற்று ஆம்பூர் அடுத்த அரங்கல் துருகம் பகுதியில் கன்றுகுட்டி, 2 ஆடுகளை சிறுத்தை கடித்து குதறியது. இதனால் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். leopard attack 5 injured

இந்நிலையில் இன்று காலை வயலுக்கு பாரதி (வயது 45). இவரது தங்கை அலுமேலு (42). ஆகிய 2 பேரும் சென்றனர். அப்போது ஏரிக்கரை அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று திடீரென அலுமேல் மீது பாய்ந்தது. இதனால் அதிர்ச்சி பாரதி சிறுத்தையை விரட்டினார். அவரையும் சிறுத்தை தாக்கியது.  leopard attack 5 injured

அப்போது அந்த வழியாக வந்த இளைஞரையும் சிறுத்தை கையில் கடித்தது. இதனையடுத்து பொதமக்களை கண்டதும் சிறத்தை கரும்பு தோட்டத்திற்கு சென்று மறைந்தது. சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உடனே போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் உடனே தகவல் தெரிவிக்கப்ட்டது. மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிறுத்தையை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் சூழ்ந்து கொண்டனர். leopard attack 5 injured

கரும்பு தோட்டத்தின் ஒரு பகுதியில் தீ வைத்தனர். பின்னர் சிறுத்தை நோக்கி கற்களை வீசிய போது திடீரென கூட்டத்திற்குள் சிறுத்தை புகுந்தது. இதில் 2 பேரை கடித்து குதறியது. இதனையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆந்திர பகுதியான வீராணமலை பகுதியில் இருந்து வழி தவறி சிறுத்தை ஊருக்குள் வந்திருக்கக் கூடும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios