Asianet News TamilAsianet News Tamil

ஜியோ அதிரடி...!! ஏப்ரல்15 வரை சலுகை நீட்டிப்பு....

jio extended their offer till apr 15
jio extended-their-offer-till-apr-15
Author
First Published Apr 1, 2017, 12:01 AM IST


மார்ச் 31  ஆம் தேதியுடன்  ஜியோவின்  இலவச  சேவையை  பெறுவதற்கு  கடைசி  தேதி என  அறிவிக்கப்பட்டு இருந்தது . இந்நிலையில்  தற்போது  ரூ 99 கு  ரீசார்ஜ் செய்வதற்கான  கால   அவகாசம்   நீட்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள்  வெளியாகி உள்ளது .

அதன்படி, ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவை ஏப்ரல் மாதம் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது, வரும்  ஏப்ரல் 15 ஆம்  தேதிக்குள்  ரூ.303 செலுத்தினால் 3 மாதங்களுக்கு இலவச சேவையை  வழங்க  உள்ளதாக  செய்திகள்  வெளியாகி உள்ளது .

வாடிக்கையாளர்கள் :

 ஜியோவின் சேவையை  இதுவரை  1௦ கோடிக்கும்  மேல் வாடிக்கையாளர்கள்  பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்  தற்போது வரை 7 கோடிக்கும்  அதிகமான  மக்கள் 99  ரூபாய்க்கு ரீசார்ஜ்  செய்து புதுப்பித்துக்கொண்டுள்ளனர்.மீதமுள்ள 3௦ சதவீத  மக்கள் , ஜியோவின்  இலவச  டேட்டா  சேவையை  பெறுவதற்காக   மட்டும்  பயன்படுத்தி  வந்ததாக  ஆய்வில் தெரிய வந்துள்ளது .

ஆதலால்,   டேட்டாவை  பயன்படுத்தும்  நோக்கில்  உள்ள  வாடிக்கையாளர்களையும் தன் பக்கம்  வைத்துக்கொள்வதற்காக  ஜியோ தற்போது  டேட்டா  பயன்படுத்தும்   வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்தும் கொடுக்கும்  வகையில் இந்த  ஆபரை அறிமுகம்  செய்ய  உள்ளதாக  தகவல்  வெளியாகி உள்ளது .

 

Follow Us:
Download App:
  • android
  • ios