ஜியோ அதிரடி...!! ஏப்ரல்15 வரை சலுகை நீட்டிப்பு....
மார்ச் 31 ஆம் தேதியுடன் ஜியோவின் இலவச சேவையை பெறுவதற்கு கடைசி தேதி என அறிவிக்கப்பட்டு இருந்தது . இந்நிலையில் தற்போது ரூ 99 கு ரீசார்ஜ் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது .
அதன்படி, ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவை ஏப்ரல் மாதம் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது, வரும் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் ரூ.303 செலுத்தினால் 3 மாதங்களுக்கு இலவச சேவையை வழங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது .
வாடிக்கையாளர்கள் :
ஜியோவின் சேவையை இதுவரை 1௦ கோடிக்கும் மேல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது வரை 7 கோடிக்கும் அதிகமான மக்கள் 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து புதுப்பித்துக்கொண்டுள்ளனர்.மீதமுள்ள 3௦ சதவீத மக்கள் , ஜியோவின் இலவச டேட்டா சேவையை பெறுவதற்காக மட்டும் பயன்படுத்தி வந்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது .
ஆதலால், டேட்டாவை பயன்படுத்தும் நோக்கில் உள்ள வாடிக்கையாளர்களையும் தன் பக்கம் வைத்துக்கொள்வதற்காக ஜியோ தற்போது டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்தும் கொடுக்கும் வகையில் இந்த ஆபரை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .