மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவராக ஜெயந்தியை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவராக ஜெயந்தியை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்துறை மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்திருந்த உத்தரவில், வணிக வரித்துறை ஆணையராக இருந்த பணீந்திர ரெட் உள்துறை செயலாளராகவும், உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் வருவாய் நிர்வாகத்துறை கமிஷனராகவும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் நசீமுதீன் தொழிலாளர் நலன் மற்றும் தனித்திறன் மேம்பாடு துறை செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளராகவும், சென்னை மெட்ரோ ரயில் வாரிய மேலான் இயக்குநர் மற்றும் முதன்மை செயலாளர்இயக்குநர் பிரதீப் யாதவ் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளராகவும், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார் வணிகவரித்துறை ஆணையர்/முதன்மை செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில், சிறப்பு அதிகாரி/ முதன்மை செயலாளராக பணியாற்றிய செந்தில்குமார் தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளராகவும் தமிழக விளையாட்டு ஆணைய முன்னாள் உறுப்பினர் செயலாளர் ஆனந்தகுமார் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராகவும், தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் தாரேஷ் அகமது -ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிஷனராகவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனர் ஜெயகாந்தன் புவியியல் மற்றும் கனிம வளத்துறை கமிஷனராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புவியியல் மற்றும் கனிம வளத்துறை இயக்குநர் நிர்மல் ராஜ் போக்குவரத்து துறை கமிஷனராகவும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மற்றும் மறுகுடியமர்த்தல் துறை செயலாளர் ஜெசிந்தா லசாரஸ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையராகவும் தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர ராஜ் வணிகவரித்துறை இணை ஆணையராகவும் தமிழக சிவில் சப்ளை கார்பரேசன் இணை மேலாண் இயக்குநர் சங்கீதா வணிக வரித்துறை நிர்வாக கூடுதல் ஆணையராகவும், திருச்சி ஆட்சியர் சிவராசு கோவை, வணிகவரித்துறை இணை ஆணையராகவும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்த்துறை கமிஷனர் மதிவாணன் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையராகவும் மரியம் பல்லவி பல்தேவ் தொழிற்சாலைகள் துறை கூடுதல் செயலாளராகவும் மின்னணு நிர்வாகத்துறை இயக்குநர் விஜயேந்திர பாண்டியன் கருவூலம் மற்றும் அக்கவுண்ட் துறை ஆணையராகவும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் லாவ்லீனா உணவுபாதுகாப்பு துறை ஆணையராகவும் ராமநாதபுரம் முன்னாள் ஆட்சியர் சந்திரகலா தொழில் முதலீடு கழக இயக்குநராகவும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை இணை செயலர் ஜான் லூயிஸ் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இணை ஆணையராகவும் அருங்காட்சியக துறை இயக்குநர் ராமன்- வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை இயக்குநராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தட்கோ மேலாண் இயக்குநர் விவேகானந்தன் மாநில தேர்தல் ஆணைய செயலாளராகவும் சென்னை முன்னாள் கலெக்டர் விஜயராணி சேலம் பட்டுநூல் வளர்ப்பு கழக இயக்குநராகவும் பால் உற்பத்தி மற்றும் பால் வளர்ச்சி கழக கமிஷனர் பிரகாஷ் வரலாறு மற்றும் காப்பகங்கள் ஆணையராகவும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சிறப்பு செயலாளர் பிங்கி ஜோயல் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் கருணாகரன் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சிறப்பு செயலாளராகவும் கருவூலத்துறை ஆணையர் வெங்கடேஷ் போக்குவரத்து துறை சிறப்பு செயலாளராகவும் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை இணை கமிஷனர் சீதா லெட்சுமி சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றத்துறை இணை செயலாளராகவும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குநர் பிரவீன் நாயர் மின்னணு நிர்வாகத்துறை இயக்குநராகவும் தமிழக பாட புத்தகம் மற்றும் கல்வி சேவை கழக மேலாண் இயக்குநர் மணிகண்டன் பள்ளிகல்வித்துறை இணை செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வரலாறு மற்றும் காப்பகங்கள் துறை முதன்மை கமிஷனர் ஹர்சகாய் மீனா திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை சிறப்பு செலயாளராகவும் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை துணை கமிஷனர் நரனவாரே மணிஷ் ஷங்கர்ராவ் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குநராகவும் தமிழக குடிநர் சப்ளை மற்றும் கழிவுநீர்வாரிய இணை மேலாண் இயக்குநர் பிரதீப்குமார் திருச்சி ஆட்சியராகவும் சேலம், பட்டுநூல் வளர்ச்சித்துறை இயக்குநர் சாந்தி தர்மபுரி ஆட்சியராகவும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் ராமநாதபுரம் ஆட்சியராகவும் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணைய ஆணையர் சித்திக் சென்னை மெட்ரோ ரயில் கழக முதன்மை செயலாளர் மற்றும் மேலாண் இயக்குநராகவும் சென்னை மெட்ரோபோலிட்டன் குடிநீர் சப்ளை மற்றும் கழிவுநீர் வாரிய முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆகாஷ் தென்காசி ஆய்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவராக ஜெயந்தி IFSஐ நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவராக இருந்த உதயன் IFS, வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை இயக்குனராக தீபக் பில்கி IFSஐ நியமனம் செய்து வனத்துறை செயலர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
