In a complaint filed with jewelery shops in Pondipazar in Chennai a policeman has made a stir in the workplace.

சென்னை தி.நகர் பாண்டிபஜாரில் நகைக் கடைகளில் பணம் வாங்கிய புகாரில் போலீஸ்காரர் ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காவல்நிலைய எழுத்தராக இருப்பவர் கார்த்திகேயன். இவர் தீபாவளி பண்டிகையையொட்டி தி.நகரில் உள்ள நகைக் கடைகளில் தொடர்ந்து பணம் வசூலித்து வருவதாக காவல் துணை ஆணையருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. 

இதையடுத்து காவல்நிலைய எழுத்தாளர் கார்த்திகேயனிடம் துணை ஆணையர் விசாரணை மேற்கொண்டார். 

விசாரணையில் கார்த்திகேயன் பணம் வாங்கி இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து, கார்த்திகேயனை மவுண்ட் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து துணை ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.