நாசர் எனும் பூனை தினமும் 5.4 லட்சம் லிட்டர் பாலை குடித்து ஏப்பம் விட்டு, நாளொன்றுக்கு 2.4கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். 

தீரன் சின்னமலையின் 217வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை படத்திற்கு அதிமுக சார்பில் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய பாலின் அளவை குறைத்து திமுக வினர் ஆதாயம் தேடுகின்றனர். தினமும் 33லட்சம் லிட்டர் அளவுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதில் 5.5 லட்சம் லிட்டர் பாலை தினமும் நாசர் என்ற பூனை குடித்துவிட்டது, இதன் மூலம் 2.4 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு, ஆண்டுக்கு, 800 கோடி ரூபாய் பாலில் இருந்து ஆதாயம் தேடி வருகிறார். இது குறித்து விசாரணை நடைபெறும் என அமைச்சர் நாசர் தெரிவிக்கிறார். துறை ரீதியான விசாரணையில் நியாயம் கிடைக்காது என கூறியவர்,விஞ்ஞான ஊழலில் ஈடுபடும் திமுகவின் பாரம்பரியத்தில் வந்த அமைச்சர் நாசரும் தொடர்கிறார் என ஜெயகுமார் குற்றம்சாட்டினார்.

தொழிலாளர்களை வஞ்சிக்கும் திமுக...கொடுத்த வாக்குறுதியை ஓராண்டாக ஏமாற்றி சாதனை..! ஸ்டாலினை சீண்டிய அண்ணாமலை

5 ஜி அலைக்கற்றையில் மிகப்பெரிய ஊழல்..!பாஜக அரசு விசாரணை நடத்தவில்லையென்றால்..! அடுத்த அரசு விசாரிக்கும்-ஆ.ராசா

அதிமுக மூத்த நிர்வாகி பன்ட்ருட்டி ராமச்சந்திரன் சசிகலாவின் சந்திப்பிற்கு பிறகு, இபிஎஸ் மீது விமர்சனம் வைத்தது குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், அதிமுக தலைமை தான் நடவடிக்கை குறித்து முடிவு செய்யும் என தெரிவித்தார். திமுக எப்பொழும் சந்தர்ப்பவாத கட்சியாக தான் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் இந்திரா காந்தியை நேருவின் மகளே வருக, இந்தியாவின் திருமகளே வருக என கருணாநிதி வரவேற்றார். பின்னர் காங்கிரஸ் கட்சியை விமர்சித்தனர். அது போல, பாஜகவை எதிர்க்கின்றனர், ஆனால், பாஜக நிர்வாகிகளுடன் இணைந்து முதலமைச்சரின் மருமகன் சபரீசன் திருச்செந்தூரில் யாகம் வளர்த்தது சந்தர்ப்பவாத அரசியலை வெளிகாட்டுகிறது என ஜெயக்குமார் விமர்சித்தார்.

டெண்டர் முறைகேடு வழக்கு: இபிஎஸ்க்கு நிம்மதி கொடுத்த உச்சநீதிமன்றம்.. சிபிஐ விசாரணைக்கான உத்தரவு ரத்து