வாழ்க கோஷத்தோடு வெயிட் லிப்ட் செய்த எடப்பாடி..! அடுத்த ரவுண்டு பேட்மிட்டன் ..ஒலிம்பிக் பதக்கம் கேரண்டி என நெட்டிசன்கள் கலாய்ப்பு...!
இன்று சேலம் மாவட்டத்தில், அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இன்று சேலம் மாவட்டத்தில், அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.சேலம் அனுப்பூர் ஊராட்சியில் 30 லட்சம் மதிப்பிலான பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.
உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தது மட்டுமில்லாமல், மக்கள் முன் தானும் உடற்பயிற்சி செய்து அனைவரையும் ஊக்கப்படுத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சேலத்தில் இருந்து கருமந்துறை வழியாக சென்ற போது, அக்ரஹாரா நாட்டார் மங்கலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வழி நெடுகிலும் பொதுமக்கள் நின்று முதல்வரை வரவேற்றனர்.
தன்னுடைய சொந்த ஊரான அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை திறந்த வைத்த முதல்வருக்கு மக்கள் தங்கள் நன்றியை தெரிவித்து கொண்டனர். இது ஒரு பக்கம் இருக்க, உடற்பயிற்சியையும் செய்து காண்பித்த முதல்வருக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் முதலவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வெளியானதால், இதை பார்க்கும் நெட்டிசன்கள், ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் கேரண்டி என விமர்சனம் செய்து வருகின்றனர்.