அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் முடிவு செய்துள்ளது அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனோ தங்கராஜ் இதுகுறித்து பேசிய போது, “அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் முடிவு செய்துள்ளது. தரமான பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ₨1 முதல் ₨2 வரை அதிகம் கிடைக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தரமான பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.1 ஊக்கத்தொகை வழங்கப்படும். பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட போதிலும், விற்பனை விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதிகபட்ச கொழுப்பு 5. 9%, இதர சத்துகள் 9. 0% உள்ள பாலுக்கு ரூ. 40. 95 கொள்முதல் விலை வழங்கப்பட்டு வந்தது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பாலின் விலைய தரத்துக்கு ஏற்ப பிரித்து 6. 0, 6. 1, 6. 2, 7. 5 என தரப்பட்டியலை உயர்த்தி உச்சபட்சமாக 7. 5% வரை பால் கொள்முதல் விலைப்பட்டியல் விரிவாக்கம் செய்துள்ளது” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கம்மி விலையில் கோவாவை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் சிறந்த டூர் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?