chennai is the best city for safe of women in india
இந்தியாவில் உள்ள 6 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றவழக்குகள் பதிவாகியுள்ளதில் டெல்லி முதலிடத்திலும், சென்னை கடைசி இடத்திலும் உள்ளதால் பெண்களுக்கு பாதுகாப்பான பெருநகரம் என்ற பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது
டெல்லி, மும்பை, சென்னை உள்பட 6 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் குறித்த புள்ளி விபரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தலைநகர் டெல்லியில் தான் பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடந்துள்ளன.


இந்த பட்டியலில் பெங்களூர், மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்கள் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ளன. இதையடுத்து பெண்களுக்கு பாதுகாப்பான பெருநகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது.
