Asianet News TamilAsianet News Tamil

பொது இடங்களில் Prank வீடியோ செய்ய தடை..! யூடியூப் சேனல்களுக்கு செக் வைத்த காவல்துறை

கோவையில் prank video என குறும்புத்தனமான வீடியோ எடுத்தல் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மட்டுமின்றி தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்படும் என கோவை மாநகர காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Ban on naughty videos in public places  YouTube channels police  has imposed restrictions
Author
First Published Sep 4, 2022, 1:45 PM IST

Prank Video-கட்டுப்பாடு

நவீன உலகத்தில் கடிகார முட்களுக்கு இணையாக மனிதர்களும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களை Prank Videos என்ற பெயரில் மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறிது சிறிதாக குறும்பு வீடியோக்கள் எடுத்து கொண்டிருந்தவர்கள், அதிக பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக மோசமான செயல்களில் இறங்கும் நிகழ்வு நாள் தோறும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள பூங்காவில் Prank Videos என்ற பெயரில் பெண்களை கேலி செய்வதாக புகார் எழுந்தது. இதனையடுத்து காவை மாநகர்  மாநகர் காவல்துறை யினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடங்களாகிய பூங்காக்கள், நடைப்பயிற்சி மைதானங்கள், பள்ளி வளாகங்கள் போன்ற பல பகுதிகளில் தனிநபர்கள் சிலர் பொதுமக்களிடையே குறும்புத்தனமான செயல்களில் ஈடுபட்டு அவற்றை வீடியோக்களாக எடுத்து குறும்புத்தனமான வீடியோக்கள் என்ற பெயரில் தங்களுக்கென்று யூ-டியூப் சேனல் வைத்துக் கொண்டு அதில் வெளியிட்டு வருவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. 

Ban on naughty videos in public places  YouTube channels police  has imposed restrictions

வரம்பு மீறிய செயல்

குறும்புத்தனமான வீடியோக்கள் என்ற பெயரில் வீடியோ எடுக்கும் பலர் அதை தொழில்முறை ரீதியாக செய்து யூ-டியூப் சேனலில் வெளியிட்டு அதன் வாயிலாக பணமும் சம்பாதித்து வருகிறார்கள். குறும்புத்தனமான வீடியோ எடுப்பவர்களின் செயல்பாடுகள் அமைதியான சூழ்நிலையினை விரும்பி பூங்காக்களை நாடி வருபவர்களிடையேயும், நடைப்பயிற்சிக்காக மைதானங்களுக்கு வருபவர்கள் இடையேயும், வணிக வளாகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் இடையேயும் மிகுந்த தாக்கத்தையும், அமைதியான சூழ்நிலைகளில் திடீர் பரபரப்பையும் ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில வீடியோக்களில் நடிப்பவர்கள் பொதுவெளியில் முகம்சுழிக்கும் வண்ணம் எதிர்பாலினத்தாரை எதேச்சையாக நடப்பதுபோல் தொட்டு அல்லது கையை பிடித்து அநாகரீகமாக நடிக்கிறார்கள். திடீரென்று நிகழும் மேற்படி வரம்புமீறிய செயல்களானது சம்மந்தப்பட்டவர்களுக்கு உடல்ரீதியாக அதிர்ச்சியையும், மனரீதியாக திகைப்பையும் ஏற்படுத்துகிறது. பின்னர் Prank Video எடுப்பவர்கள் அதுகுறித்து தெரிவித்து சமாதானம் செய்கின்றனர். இருப்பினும் இச்செயல்கள் பொதுமக்களிடையே, குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பெண்களிடையே, விரும்பத்தகாத எதிர் விளைவுகளை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் அணிக்கு ஆதரவளிக்க எம்எல்ஏக்கு ரூ. 3கோடி..? கொடுத்தனுப்பிய பணம் திடீர் மாயம்..! காணாமல் போனது எப்படி..?

Ban on naughty videos in public places  YouTube channels police  has imposed restrictions

Prank Video எடுக்க தடை

 Prank Videoக்கள் யூ-டியூப் சேனல்களில் சம்மந்தப்பட்ட நபரின் அனுமதியின்றியும், அவருக்கு தெரியாமலும் வெளியிடப்படுவதால் அவரது தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுகிறது. குறும்புத்தனமான வீடியோ எடுப்பவர்களின் இச்செயலானது, அடிப்படை உரிமையான தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது. கோவை மாநகரிலும், சமீப காலமாக Prank Videos என்ற பெயரில் பந்தய சாலை போன்ற மக்கள் கூடும் இடங்களில் நடைபெறும் குறும்புத்தனமான வீடியோ எடுப்பவர்களின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே அதிருப்தியும், புகாரும் எழுந்துவருகிறது. எனவே, கோவை மாநகரில் எவரேனும் Prank Video எடுத்தல் என்ற விதத்தில் பொதுமக்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் அவர்களது இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு உண்டாக்கும் வகையில் நடந்து கொண்டாலோ அல்லது அதுபற்றிய புகார் வரப்பட்டாலோ உடனடியாக சம்மந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்படுவதுடன் அவரது வீடியோ சேனலும் முடக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

உல்லாசத்திற்கு பெண்களை கேட்டு தொந்தரவு..? சினிமா தயாரிப்பாளர் கொலை...! குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்

Ban on naughty videos in public places  YouTube channels police  has imposed restrictions

தமிழகம் முழுவதும் கட்டுப்பாடு தேவை

மேலும் புகார் தெரிவிக்கப்பட்ட நபர்களின் மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் மட்டுமின்றி, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட பிற சிறப்பு சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்கு தொடரப்பட்டு கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல்துறையின் அறிவிப்பை வரவேற்றுள்ள பொதுமக்கள் கோவை பகுதி மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் இது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

9 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த தமிழக அரசு..! என்ன காரணம் தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios