Asianet News TamilAsianet News Tamil

கடலில் குளித்த போது நீரில் மூழ்கி 3 கல்லூரி மாணவிகள் உயிரிழந்த பரிதாபம்!

பூம்புகாரில் சுற்றுலா வந்த கல்லூரி மாணவிகள் கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

3 college students drowned death
Author
Tamil Nadu, First Published Dec 19, 2018, 4:42 PM IST

பூம்புகாரில் சுற்றுலா வந்த கல்லூரி மாணவிகள் கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மயிலாடுதுறையில் உள்ள தர்மபுரம் ஆதீனம் மகளிர் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.ஏ., படிப்பவர்கள் மஞ்சு, விவேகா, முதலாம் ஆண்டு படித்துவந்தவர் சிவப்பிரியா. இவர்கள் 3 பேரும் தனது தோழிகள் உட்பட 7 பேர் இன்று காலை பூம்புகார் கடற்கரைக்கு சுற்றுலா சென்றனர்.

அப்போது கடலில் இறங்கி 5 மாணவிகள் குளித்துக் கொண்டிருந்த போது 2 மாணவிகள் கடற்கரையில் அமர்ந்திருந்தனர். அப்போது பெரிய அலையில் சிக்கிய 5 மாணவிகளும் ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்த மீனவர்கள் சங்கீதா, ஹசீனா பேகம் ஆகிய இரு மாணவிகளை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 3 college students drowned death

ஆனால் விவேகா, மஞ்சு, சிவப்பிரியா ஆகிய மூன்று மாணவிகள் மூச்சு திணறி உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 3 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios