Asianet News TamilAsianet News Tamil

உடல்நிலை பாதித்தபோதும் விடாது துரத்திய கடன் தொல்லை; தூய்மை பணியாளர் விபரீத முடிவு

சிவகாசியில் தூய்மை பணியாளர் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

cleaning worker hanged death in virudhunagar district vel
Author
First Published Jun 14, 2024, 1:28 PM IST | Last Updated Jun 14, 2024, 1:28 PM IST

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் எம்ஜிஆர் நகரில் உள்ள கண்ணகி காலனியை சேர்ந்தவர் சித்திரைவேல். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி பெருமாள் அம்மாள். இவர்களுக்கு சப்பானி முத்தையா என்ற 25 வயதுடைய மகன் சிவகாசி மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். 

இந்நிலையில் சப்பானி முத்தையா தனது தேவைக்காக பலரிடம் கடன் வாங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கான வட்டியை தொடர்ந்து கட்டி வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் சப்பானி முத்தையாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வட்டியை செலுத்த முடியாமல் இருந்து வந்துள்ளார். 

குற்றவாளிகளிடம் கஞ்சாவை கொடுத்து விற்கச்சொல்லும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரி - மதுரையில் அதிர்ச்சி சம்பவம்

அப்போது அவரது தாயார் பெருமாள் அம்மாளை வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு கடனுக்கு வட்டியை செலுத்த கூறியுள்ளார். இதற்கு பெருமாள் அம்மாள் மறுத்து உறவினர் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் மனம் உடைந்த தூய்மை பணியாளர் சப்பானி முத்தையா அவர்களது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

Vijayaprabhakaran: விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பில்லை; கைவிரித்த தேர்தல் ஆணையம்

இதுகுறித்து பெருமாள் அம்மாள் திருத்தங்கல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர் சப்பானி முத்தையா தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும் வாழ விரும்பினாலும் கடன் பிரச்சனையால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் அழுதபடி பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பதிலாக பரவி வருகிறது. 

கடன் தொல்லையால் சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இவரது தற்கொலையும் சேர்த்து மொத்தமாக எட்டு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios