Asianet News TamilAsianet News Tamil

Tirupathur:கோவிலுக்கு சென்ற போது பயங்கரம்.. 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்.. 7 பேர் துடிதுடித்து உயிரிழப்பு.!

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புதூர்நாடு அடுத்த புலியூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் 20க்கும் மேற்பட்டோர் சேம்பரை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு தரிசனம் செய்ய டாடா ஏசி வாகனம் மூலம் சென்றனர். 

Accident while going to the temple.. 7 devotees killed
Author
Tirupattur, First Published Apr 2, 2022, 4:43 PM IST

திருப்பத்தூர் அருகே ஜவ்வாது மலையில் ஏறிய போது கட்டுப்பாட்டை இழந்த வேன் விபத்துக்கள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

கோயிலுக்கு சென்ற போது விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புதூர்நாடு அடுத்த புலியூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் 20க்கும் மேற்பட்டோர் சேம்பரை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு தரிசனம் செய்ய டாடா ஏசி வாகனம் மூலம் சென்றனர். அப்போது வாகனம் தனது கட்டுபாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

Accident while going to the temple.. 7 devotees killed

7 பேர் பலி

மேலும், படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் வலியால் துடித்துக்கொண்டிருந்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு  திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் ஒரே ஊரை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios