Asianet News TamilAsianet News Tamil

வீட்டின் வெளியே விளையாடிய 2 வயது மழைலை குழந்தை வாலியில் மூழ்கி உயிரிழப்பு

வேலூர் மாவட்டத்தில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது பெண் குழந்தை வாலியில் இருந்த தண்ணீரில் மூழ்கி  உயிரிழப்பு.

2 years old child drowned bucket water and died in vellore district vel
Author
First Published Nov 20, 2023, 11:32 AM IST

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த திருவலம், ஆரிமுத்து மேட்டுர், நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் வீராசாமி. இவரது மகள் ரேச்சல் (வயது 2) இரவு ரேச்சிலின் தாய் வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார். சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிகொண்டு இருந்தார். அப்போது வீட்டிற்கு வெளியே வாளியில் இருந்த தண்ணீரில் சிறுமி கைகளை நனைத்தபடி நீரில் விளையாடியுள்ளார்.

திருக்குறள் வாசித்து உறுதிமொழி எடுத்து அமெரிக்க பெண்ணை கரம்பிடித்த தஞ்சை தமிழன்

அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி தவறி வாலியில் உள்ள தண்ணீரில் விழுந்து மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். நீண்ட நேரத்திற்கு பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுமியின் தாய் குழந்தை வாலியில் உள்ள தண்ணீரில் மூழ்கிக் கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். குழந்தையை மீட்டு பார்த்தபோது மகள் இறந்து கிடந்தது தெரிய வந்தது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மகளின் உடலை பார்த்து தாய் கதறி துடித்தார். இது குறித்து தகவல் அறிந்த திருவலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios