Asianet News TamilAsianet News Tamil

இரவில் உணவகத்தின் கூரையை பிரித்து பணம் திருடும் பெண்கள்: சிசிடிவி காட்சியில் வெளியான உண்மை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நள்ளிரவில் அசைவ உணவகத்தின் கூரையை பிரித்துக் கொண்டு 2 பெண்கள் உள்ளே சென்று திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி ஆரணி பகுதியில் உள்ள வியாபாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

two ladies make theft money in hotel in tiruvannamalai
Author
First Published Jan 13, 2023, 10:45 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் அசைவ உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் 10க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பணி முடிந்ததும் உணவகத்தை பூட்டிவிட்டு சென்று விட்டனர்.

குடிநீரில் மலம்: பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ள மிரட்டுவதா? ரஞ்சித் ஆவேசம்

இதையடுத்து வழக்கம்போல் இன்று காலை உணவக உரிமையாளர் உணவகத்தை திறந்து பார்த்த போது கல்லாப்பெட்டியை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கல்லாவில் வைத்திருந்த பணம் மொத்தமாக திருடப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாக ஆரணி கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி ஆரணி கிராமிய காவல் துறையினர் உணவகத்தில் உள்ள சிசிடிவி கேமராவை பார்த்தபோது நள்ளிரவு 1 மணி அளவில் இரண்டு பெண்கள் சுடிதார் மீது கோட் மற்றும் முகமூடி அணிந்து கூரையை பிரித்துக் கொண்டு உணவகத்திற்கு உள்ளே இறங்கி கல்லாப் பெட்டியை திறந்து அதிலிருந்து சுமார் 4,000 ரூபாய் பணத்தை திருடுவது பதிவாகியுள்ளது.

ஜல்லிக்கட்டின் பிறப்பிடம் மற்றும் ஜல்லிக்கட்டினால் வெடித்த போராட்டமும்… ஒரு பார்வை!!

பின்னர் காவல்துறையினர் உணவகத்தின் சிசிடிவி பதிவை வைத்து 2 பெண் குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆரணி பகுதியில் நள்ளிரவில் 2 பெண்கள் உணவகத்தின் கூரையை பிரித்துக் கொண்டு உள்ளே இறங்கி திருடும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்கள், வியாபாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios