Asianet News TamilAsianet News Tamil

திருவண்ணாமலையில் கோர விபத்து.. 4 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி பலி.. நடந்தது என்ன?

திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கி 4 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் காரில் பயணம் செய்துள்ளனர். அப்போது கார் சின்ன காங்கேயனூர் நோக்கி வந்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற டிராக்டரின் மீது பயங்கர வேகத்தில் மோதியது.

Thiruvannamalai Car accident... 4 medical college students death tvk
Author
First Published Feb 22, 2024, 8:41 AM IST

திருவண்ணாமலை அருகே டிராக்டர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கி 4 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் காரில் பயணம் செய்துள்ளனர். அப்போது கார் சின்ன காங்கேயனூர் நோக்கி வந்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற டிராக்டரின் மீது பயங்கர வேகத்தில் மோதியது. பின்னர், பள்ளத்தில் கவிழ்ந்தது. 

இதையும் படிங்க: ஐயோ! கடவுளே! வளைகாப்பு முடிந்த கையோடு தாய் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த கர்ப்பிணி உயிரிழப்பு! நடந்தது என்ன?

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அவ்வழியாக சென்றவர்கள் கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 4 மருத்துவக்கல்லூரி மாணவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க:  கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. 9 பேர் உடல்நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலி.. நடந்தது என்ன?

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விவரத்தையும், எங்கு செல்லும் போது விபத்து நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை 3 மணிக்கு நடந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios