அவிநாசி அருகே தனியார் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவிநாசி நாதம்பாளையம் அருகே தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தவர் கந்தேஸ்வரி. இவர் ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்துள்ளார். இன்று காலை பள்ளியில் இதைத்தொடர்ந்து நடைபெற்ற இறை வழிபாட்டில் பங்கேற்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்த கந்தேஸ்வரி உயிரிழந்தார். இது குறித்து அவிநாசி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Add Asianetnews Tamil as a Preferred Source

