MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தலை துண்டிக்கப்பட்டு காவல் ஆய்வாளர் படுகொ*ல: அதிமுக MLA தோட்டத்தில் நடந்த பகீர் சம்பவம்

தலை துண்டிக்கப்பட்டு காவல் ஆய்வாளர் படுகொ*ல: அதிமுக MLA தோட்டத்தில் நடந்த பகீர் சம்பவம்

திருப்பூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் ஆய்வாளர் சண்முகவேல் அதிமுக எம்எல்ஏ.வின் தோட்டத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 Min read
Velmurugan s
Published : Aug 06 2025, 07:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர்
Image Credit : Asianet News

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் சிறப்பு காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் சண்முகவேல். இவர் நேற்று இரவு வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது இரவு 11.30 மணியளவில் குடிமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பில் சிக்கனூர்த்தி பகுதியில் அமைந்துள்ள அதிமுக மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தோட்டத்தில் தந்தை, மகன் இடையே சண்டை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

24
கண்டித்த சண்முகவேல்
Image Credit : Asianet News

கண்டித்த சண்முகவேல்

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு ஆய்வாளர் சண்முகவேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்துள்ளார். அவருடன் காவலர் ஒருவரும் சென்றதாக சொல்லப்படுகிறது. சம்பவ இடத்தில் மது அருந்திவிட்டு சண்டையில் ஈடுபட்ட நபர்களை சண்முகவேல் கண்டித்து சண்டையை நிறுத்தியதாக சொல்லப்படுகிறது.

Related Articles

Related image1
நேற்று திருப்பூர்! இன்று திருவள்ளூர்! திருமணமான 4 நாட்களில் அதுவும் ஒரு சவரன் நகைக்காக இப்படியா?
Related image2
Now Playing
கவின் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் செய்த கட்ட பஞ்சாயத்து....இது ஏற்புடையது அல்ல ! திருமாவளவன் பேட்டி.!
34
தலை துண்டிக்கப்பட்டு படுகொலை
Image Credit : Asianet News

தலை துண்டிக்கப்பட்டு படுகொலை

சண்டை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து சண்முகவேல் அப்பகுதியில் இருந்து புறப்படத் தயாரான நிலையில், திடீரென ஒரு கும்பல் காவல் ஆய்வாளர் மீது சரமாரியாக வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் SI சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

44
போலீஸ் விசாரணை
Image Credit : Asianet News

போலீஸ் விசாரணை

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த SI, MLA தோட்டத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
காவல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved