Asianet News TamilAsianet News Tamil

ஈரோடு அருகே ஓடும் ரயிலில் சக பயணிகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த விவகாரம்; சிறுவன் உள்பட 4 போதை ஆசாமிகள் கைது

சென்னையில் இருந்து கோவை சென்ற ரயிலில் மது போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் சக பயணிகளை தாக்கி, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 person arrested who are attack co passenger in running train in tirupur vel
Author
First Published May 27, 2024, 6:06 PM IST

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் எண். 22639 ஆலப்புழா விரைவு ரயிலின், S-10 பெட்டியில், சென்னை கொளத்தூரைச் சேர்ந்த மணிகண்டன், என்பவர்  தனது குடும்பத்தினருடன் பயணம் செய்து வந்தனர். அப்போது ரயில் ஈரோடு மற்றும் திருப்பூர் இரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் போது அந்த பெட்டியில் பயணம் செய்து வந்த இளைஞர்கள் மதுபோதையில் புகை பிடித்து கொண்டும், சத்தமாக அநாகரீகமாக பேசி கொண்டும் சக இரயில் பயணிகளுக்கு தொந்தரவு செய்யும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. 

கழிவு நீர் செல்வதில் தகராறு; பெண் உள்பட மூவரை கம்பு, கட்டையால் புரட்டி எடுத்த இளைஞர்கள்

அப்போது குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இருக்கும் இடத்தில் ஏன் புகை பிடிக்கிறீர்கள் என கேட்ட மணிகண்டனை அந்த இளைஞர்கள் தரக் குறைவாக திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும், கைகளால் தாக்கிவிட்டு ரயில் திருப்பூர் இரயில் நிலையம் வந்ததும் இறங்கி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்தான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது சம்மந்தமாக மணிகண்டன் அளித்த புகாரின் மீது திருப்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தினர். 

அந்த சம்வத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய ரயில்வே காவல் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் தனலட்சுமி,  தலைமையில், உதவி ஆய்வாளர் பாபு, மற்றும் கார்முகில்வானன், சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகியோர் ஆடங்கிய இரண்டு தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி முதல் குற்றவாளியை கோவை சிறையில் அடைத்தனர். இளம் சிறாரை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். 

மகள்களுக்கு நீச்சல் கற்றுகொடுக்க குட்டைக்கு அழைத்து சென்ற தந்தை; மகள்களோடு பிணமாக வீடு திரும்பிய சோகம் - கோவையில் பரபரப்பு

இனைத் தொடர்ந்து இதே விவகாரத்தில் தொடர்புடைய திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த  சுடலைராஜ், கரன் ஆகிய இருவரை  கைது செய்து சிறையில் அடைத்தனர். இரவு நேர இரயில்களில் ரோந்து பணிகளை ரயில்வே காவல் துறையினர் அதிகரிக்கவும், மேலும்  பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க அனைத்து ஆய்வாளர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.

இரயில் பயணிகள் பாதுகாப்பு சம்மந்தமான புகார்களுக்கு 24x7 ரயில்வே காவல் உதவி மைய எண். 1512 மற்றும் வாட்ஸ்அப் எண். 99625-00500 ஐ தொடர்பு கொள்ளவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios