Asianet News TamilAsianet News Tamil

அணில் சேமியாவில் இறந்து கிடந்த தவளை.. வாடிக்கையாளர் அதிர்ச்சி..!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்தவர் பூமிநாதன். தீபாளிக்கு முன்தினம் மாளிகை கடைக்கு சென்று அணி சேமியா வாங்கியுள்ளார். அந்த சேமியை நேற்று பிரித்து பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

dead Frog in Anil Semiya.. Customer shock tvk
Author
First Published Nov 14, 2023, 2:43 PM IST

மளிகை கடையில் வாங்கிய அணில் சேமியா பாக்கெட்டில் இறந்து காய்ந்துபோன நிலையில் தவளை இருந்த சம்பவம் வாடிக்கையாளரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்தவர் பூமிநாதன். தீபாளிக்கு முன்தினம் மாளிகை கடைக்கு சென்று அணி சேமியா வாங்கியுள்ளார். அந்த சேமியை நேற்று பிரித்து பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், இறந்த நிலையில் தவளை ஒன்று கிடந்துள்ளது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதுதொடர்பாக மாளிகை கடைக்காரரிடம் வாடிக்கையாளர் முறையிட்டுள்ளார். பிரபல கம்பெனி என்பதால் வாங்கி விற்பனை செய்கிறேன் இதில் என்னுடைய தவறு எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், இதனை அணில் சேமியா விற்பனை மேலாளர் தொழிற்சாலையில் தவறு நடக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான அணில் அப்பளம் பாக்கெட்டை புழு இருந்து சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க;- ஷாக்கிங் நியூஸ்.. கனமழையால் விடுமுறை அறிவித்த பள்ளிகளுக்கு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை.!

Follow Us:
Download App:
  • android
  • ios