MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சிவகங்கை
  • சமையல் செய்யும் போது பயங்கர சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்.. அலறிய கிராமம்.. மூன்று பேரின் நிலைமை என்ன?

சமையல் செய்யும் போது பயங்கர சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்.. அலறிய கிராமம்.. மூன்று பேரின் நிலைமை என்ன?

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், வீட்டில் இருந்த பெண், அவரது உறவினர் மற்றும் வீட்டுப் பணியாளர் என மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.

1 Min read
Author : vinoth kumar
Published : Jan 30 2026, 03:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து
Image Credit : Asianet News

கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி டிடி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி ஆட்சி இவருக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் மூவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பழனி பாதயாத்திரை செல்வதற்காக தனது சொந்த ஊரான டிடி நகர் வீட்டிற்கு வந்த லட்சுமி ஆட்சி தனது மகன்களை பழனி பாதையாத்திரைக்கு அனுப்பி வைத்துவிட்டு காரைக்குடியில் உள்ள தனது வீட்டில் தனது சித்தி மகள் தேவி மற்றும் வீட்டில் பணிபுரியும் நபருடன் தங்கியுள்ளனர்.

23
மூன்று பேர் படுகாயம்
Image Credit : social media

மூன்று பேர் படுகாயம்

இந்நிலையில் இன்று வீட்டில் பணிபுரியும் கருப்பு என்பவர் காலையில் சமையல் செய்துள்ளார். அப்போது சமையல் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். மேலும் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் அனைத்தும் மூடி இருந்ததால் சிலிண்டர் வெடித்ததில் அனைத்து அறைகளிலும் தீ மளமளவென பரவியது.

Related Articles

Related image1
பேருந்தை மெதுவாக இயக்க சொன்ன பயணி.. கன்னத்தில் பளார் விட்ட ஓட்டுநர்..! திருச்சியில் பரபரப்பு
Related image2
பொதுமக்களே உஷார்.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?
33
அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை
Image Credit : stockPhoto

அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை

இதில் லட்சுமி ஆட்சி மற்றும் அவரது அக்கா மகள் வீட்டில் பணிபுரியும் கருப்பு என அனைவரும் படுகாயம் அடைந்து அலறி கூச்சலிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காரைக்குடி வடக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
வாயு உருளை
காவல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஊராட்சிகளில் கலப்பட பிளீச்சிங் பவுடர்... சிவகங்கை மாவட்டத்தில் அவலம்..!
Recommended image2
விசாரணைக்கு சென்ற இளைஞர் திடீர் மரணம்! 6 போலீசார் பணியிடை நீக்கம்! என்ன நடந்தது?
Recommended image3
அதிகாலையில் நொடி பொழுதில் நடந்த பயங்கர விபத்து! 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு! 16 பேர் படுகாயம்!
Related Stories
Recommended image1
பேருந்தை மெதுவாக இயக்க சொன்ன பயணி.. கன்னத்தில் பளார் விட்ட ஓட்டுநர்..! திருச்சியில் பரபரப்பு
Recommended image2
பொதுமக்களே உஷார்.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved