MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பொதுமக்களே உஷார்.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

பொதுமக்களே உஷார்.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்றும், சில மாவட்டங்களில் பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், பிப்ரவரி 1 முதல் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 30 2026, 03:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வறண்ட வானிலை
Image Credit : our own

வறண்ட வானிலை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிபொழிவு நிலவி வரும் நிலையில் வரும் நாட்கள் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால பகுதுகளால் வறண்ட வானிலை நிலவக்கூடும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

25
பிப்ரவரி 1
Image Credit : Getty

பிப்ரவரி 1

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். திருவள்ளூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

Related Articles

Related image1
மாதத்தின் இறுதி நாளான சனிக்கிழமை இப்படியா! தமிழகம் முழுவதும் 8 மணி நேரம் மின்தடை!
Related image2
பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 கல்வி உதவித் தொகை.! மிஸ் பண்ணாதீங்க.! நாளை முக்கியமான நாள்.! வெளியான அறிவிப்பு
35
பிப்ரவரி 2 மற்றும் 3
Image Credit : ANI

பிப்ரவரி 2 மற்றும் 3

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் பிப்ரவரி 3ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

45
சென்னை மற்றும் புறநகர் வானிலை அப்டேட்
Image Credit : ANI

சென்னை மற்றும் புறநகர் வானிலை அப்டேட்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

55
மீனவர்களுக்கான எச்சரிக்கை
Image Credit : our own

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தமிழக கடலோரப்பகுதிகள்

இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை

Latest Videos
Recommended Stories
Recommended image1
கர்நாடகத்தில் பால் கொள்முதல் செய்யும் ஆவின்.. தமிழக உழவர்களுக்கு துரோகம் இழைக்கும் அரசு.. அன்புமணி கண்டனம்
Recommended image2
சென்னை நடுநடுங்க வைத்த கொலை.. ஒரே இரவில் குடும்பத்தை கருவறுத்த கும்பல்.. 3 நாட்களுக்கு பிறகு பெண்ணின் உடல் கண்டெடுப்பு!
Recommended image3
பேருந்தை மெதுவாக இயக்க சொன்ன பயணி.. கன்னத்தில் பளார் விட்ட ஓட்டுநர்..! திருச்சியில் பரபரப்பு
Related Stories
Recommended image1
மாதத்தின் இறுதி நாளான சனிக்கிழமை இப்படியா! தமிழகம் முழுவதும் 8 மணி நேரம் மின்தடை!
Recommended image2
பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 கல்வி உதவித் தொகை.! மிஸ் பண்ணாதீங்க.! நாளை முக்கியமான நாள்.! வெளியான அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved