- Home
- Tamil Nadu News
- பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 கல்வி உதவித் தொகை.! மிஸ் பண்ணாதீங்க.! நாளை முக்கியமான நாள்.! வெளியான அறிவிப்பு
பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 கல்வி உதவித் தொகை.! மிஸ் பண்ணாதீங்க.! நாளை முக்கியமான நாள்.! வெளியான அறிவிப்பு
School Student Scholarships: தமிழக அரசு 10ம் வகுப்பு மாணவர்களுக்காக முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வை நடத்துகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் 1,000 மாணவர்களுக்கு, 12ம் வகுப்பு வரை ஆண்டுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும்.

தமிழக அரசு
கல்விக்கு முக்கியத்தும் கொடுக்கும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. இது மாணவர்களின் உயர்கல்விக்கு வழிவகுக்கிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி படிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 2023- 2024ம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை
இதில் தேர்ச்சி பெறும் 1,000 மாணவ, மாணவிகளுக்கு, 12ம் வகுப்பு முடிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் உதவித் தொகை வழங்கப்படும். இந்த கல்வி உதவி தொகை சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்ட மாணவர்களுக்கும் கிடைக்கும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. இக்கல்வியாண்டிற்கான முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 2026ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி சனிக்கிழமை அதாவது நாளை நடைபெற உள்ளது.
தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம்
தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகங்களில் உள்ள பாடத் திட்டங்களின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வானது தாள் 1 (கணிதம் 60 வினாக்கள்) காலை மணி 10 முதல் 12 வரையிலும், தாள் 2 (அறிவியல் மற்றும் சமூக அறிவியல் 60 வினாக்கள்) பிற்பகல் மணி 2 முதல் 4 மணி வரையிலும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்
மேலும் ஒவ்வொரு அறையிலும் 20 பேர் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களுக்கு வழங்கப்பட்ட ஓஎம்ஆர் விடைத்தாள், அவர்களது பதிவெண்ணுக்கு உரியது தானா என்பதை ஹால்டிக்கெட்டுடன் ஒப்பிட்டு உறுதிசெய்ய வேண்டும். தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் வினாத்தாளில் விடைகளை குறிக்கக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும் என்பது உட்பட தேர்வு மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

