MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஷாக்கிங் நியூஸ்.. கனமழையால் விடுமுறை அறிவித்த பள்ளிகளுக்கு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை.!

ஷாக்கிங் நியூஸ்.. கனமழையால் விடுமுறை அறிவித்த பள்ளிகளுக்கு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை.!

மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில், விடுமுறை நாட்களை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

1 Min read
vinoth kumar
Published : Nov 14 2023, 12:38 PM IST| Updated : Nov 14 2023, 12:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இன்று உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 16ம் தேதி மத்திய மற்றும் அதனை ஓட்டிய தெற்கு வங்கடக்கடலில் தாழ்வு மண்டலமாகும். 

23

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும். குறிப்பாக  விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் உள்ளிட்ட 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

33

இந்நிலையில் கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் விடுமுறை நாட்களை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.  இது குறித்து அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவு செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இன்று மழை காரணமாக 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க;- கனமழை எச்சரிக்கை.! 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்ததெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளிக் கல்வித் துறை
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved