Asianet News TamilAsianet News Tamil

நீ இல்லாத உலகத்துல எனக்கு என்ன வேலை! காதல் மனைவி தற்கொலை! 2 முறை காப்பாற்றி 3வது முறை உயிரை விட்ட அரசு டாக்டர்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த சவுமியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் தென்காசியில் வசித்து வந்தனர். 
 

Government Doctor committed  suicide by injecting poison in salem tvk
Author
First Published Jul 14, 2024, 4:28 PM IST | Last Updated Jul 14, 2024, 4:28 PM IST

காதல் மனைவி தற்கொலை செய்து கொண்ட மனவேதனையில் சேலம் அரசு மருத்துவர் விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் அம்மாபேட்டை வாய்க்கால்பட்டறையை சேர்ந்தவர் இனியன் (32). இவர் தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த சவுமியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் தென்காசியில் வசித்து வந்தனர். 

இந்நிலையில் இனியன் மருத்துவ பயிற்சிக்காக வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால் சவுமியா யார் வீட்டில் தங்குவது? தொடர்பாக இருவருக்கும் இடையே கடந்த 6-ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த சவுமியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மனைவி இறந்த சோகத்தில் இருந்த இனியனும்  அன்று இரவே ஊசியை  உடலில் செலுத்தி தற்கொலை முயன்றார். ஆனால் அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். அதேபோல் கடந்த 10-ம் தேதி தனது வீட்டில் 2-வது முறையாக 10 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற அவரை காப்பாற்றினர். 

அவருக்கு கவுன்சலிங் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது அறைக்கு வழக்கம் போல் தூங்க சென்ற அவர் காலையில் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது மகன் கையில் ஊசி செலுத்தி இறந்து கிடந்துள்ளார். இதுதொடர்பாக அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இனியன்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

அப்போது அவர் குளுக்கோஸ் பாட்டிலில் விஷ ஊசி செலுத்தி பின்னர் அந்த குளுக்கோசை தனது உடலில் 'டிரிப்ஸ்' மூலம் செலுத்தி தற்கொலை செய்து கொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios